படுக்கைக்கு அழைத்த 60 வயது நடிகர்.. போட்டு உடைத்த சீரியல் நடிகை.. கண்ணீர் பேச்சு..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் நடிகை ரிஹானாவும் ஒருவர். நடிகை ரிஹானா பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் மாரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை விஜய் டிவியில் பிரபலமான டிவி தொடர்களில் முக்கியமான நிகழ்ச்சியாக அது இருந்து வருகிறது.

இந்த காரணத்தினால் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் நடிகைகளுக்கு வரவேற்பு என்பது எளிதாகவே கிடைத்து விடுகிறது. அந்த வகையில் ரிஹானாவும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.

சீரியலில் கிடைத்த வரவேற்பு:

இந்த சீரியலில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க என்கிற சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது என்னுடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவருக்கும் தெரியும். எனது வாழ்க்கையை பொருத்தவரை எனக்கு படிப்பின் மீது ஆர்வம் இருந்தது, ஆனால் குடும்ப சூழல் காரணமாக பாதியிலேயே படிப்பை விட்டு விட்டு வேலைக்கு போய் விட்டேன்.

அதற்கு பிறகு சீக்கிரமே கல்யாணம் நடந்து விட்டது. கல்யாண வாழ்க்கையும் திருப்திகரமாக அமையவில்லை. சீக்கிரமே குழந்தைகளும் பிறந்து விட்டன. சினிமாவிலாவது ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்று நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன்.

நான் திருமணத்திற்கு முன்பு ஹோம் நர்ஸாக இருந்த காலகட்டங்களில் பல கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறேன். ஒருமுறை ஒரு வீட்டிற்கு ஹோம் நர்ஷாக சென்றேன். அந்த வீட்டில் இருந்த 60 வயது முதியவர் எதற்கு இந்த வேலைக்கு நீ வருகிறாய் என்று கேட்டார்.

நர்ஸாக வேலை:

நான் என் திருமணத்திற்கு நகை வாங்க சீட்டு போட்டு இருக்கிறேன் அதற்காகத்தான் வேலைக்கு வருகிறேன் என்று கூறினேன். அப்போது அந்த முதியவர் இப்படி எல்லாம் கஷ்டப்பட வேண்டாம். என்னை அனுசரித்து நடந்து கொண்டால் உன் திருமணத்திற்கான அனைத்து செலவையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

அதை கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அப்பொழுது எனக்கு 17 வயது தான் ஆகியிருந்தது. என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. உடனே ஒரு அறைக்குள் சென்று என்னை நானே பூட்டிக்கொண்டு எனது அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தேன்.

இது போன்ற மோசமானவர்களும் உலகத்தில் இருக்கதான் செய்கிறார்கள் அதேபோல நிறைய முதியவர்கள் என்னை அழைத்து எனக்கு ஆசீர்வாதமும் செய்து இருக்கிறார்கள் என்று கூறுகிறார் ரிஹானா. மேலும் அவர் இரண்டாவது திருமணம் குறித்து கூறும் பொழுது கண்டிப்பாக இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன்.

கணவன் இல்லாமல் வாழும் பெண்களுக்கு நிறைய பிரச்சனைகள் உண்டு ஆனால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் ஒரு பெண்ணை இந்த சமூகம் தவறாகதான் பார்க்கும் இருந்தாலும் நான் நிச்சயம் இரண்டாவது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுகிறார் ரிஹானா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …