“நிறைய வலி.. நிறைய மெனக்கெடல்..” – புகைப்படங்களை வெளியிட்டு அனிதா வெளியிட்ட தகவல்..!

இந்த வாட்டர் பாட்டிலை இந்த கொண்டு போய் வை என்று கூறிய நீருப்பிடம் சூ*(ல வைப்பாங்க என்று பதில் அளித்து மீம் மெட்டீரியலாக மாறிய செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். தற்போது ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளார். அதனுடன் உங்களுக்கும் இது விரைவில் நடக்கும் என்று வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் சமூக பிரச்சனைகளில் தன்னுடைய கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கினார்.

அந்த வகையில் பொட்டு வைத்துக் கொள்வது பற்றியும் தாலியை கழற்றி வைப்பது பற்றியும் இவர் கூறிய கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

திருமணமான பின்னும் ஏன் தாலி அணியாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறீர்கள் என்று கேட்டபோது என்னுடைய நிகழ்ச்சியை எல்லா மதத்தவரும் பார்ப்பார்கள் என்பதாலும் நெற்றியில் வைக்கும் பொட்டு என்பதும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளம் என்பதால் மற்ற மதத்தினர் என்னுடைய நிகழ்ச்சியை பார்க்க தவறி விடுவார்களோ என்ற எண்ணத்தில்தான் நான் தாலியும் பொட்டும் அணிந்து கொள்வதில்லை என்று கூறினார்.

அதாவது,தாலியோ பொட்டோ அணிந்து இருந்தால் மற்ற மதத்தினருக்கு பிடிக்காது என்று நீங்கள் எப்படி முடிவு செய்வீர்கள் என்று இணையவாசிகள் இவரை பொருத்து எடுத்தனர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்துகொண்டார் அம்மணி இது போதாது என்று பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒட்டிடி பிளாட்பார்மில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மோசமான வார்த்தைகளைப் பேசி ரசிகர்கள் மத்தியில் கடுமையாக கெட்ட பெயரை எடுத்துக் கொண்டார் அனிதா.

இந்நிலையில் தற்போது சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ள அனிதா, Finally! வீடு எப்போதுமே எங்க ரெண்டு பேருக்கும் மிக பெரிய கனவு.வாடகை வீட்டுலயே நல்ல வீடு கிடைக்காதா..பெட்ரூம் வச்ச வீட்டுக்கு போக மாட்டோமானு ஏங்குன காலம் எல்லாம் இருக்கு..ஓட்டு வீடுல பிறந்து வளர்ந்த பிரபாக்கும் அதே தான்.

.இன்னக்கி எங்களுக்கு பிடிச்ச மாதிரி எங்களுக்காக ஒரு வீடு. நிறைய வலிகளும் நிறைய உழைப்பும் நிறைய மெனக்கெடல்களும் கடந்து அன்னையர் தினம் அன்று எங்கள் அன்னையர்களுக்காக அவர்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கி விட்டோம்❤️ “நம்ம எல்லார் வாழ்க்கையும் ஒரு நாள் நமக்கு பிடிச்ச மாதிரி மாறும்”. இப்ப அதை இன்னும் வலிமையா நம்புறேன்.இதை படிக்கிற நீங்க எல்லாருமே சீக்கிரம் வீடு வாங்குவீங்க.எங்க சார்பா அதற்கான வாழ்த்துகள்.

இவ்வாறு கூறி சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிறை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …