ஒரே லிப்லாக் காட்சி.. ப்ரேக் அப்பில் முடிந்த சிம்ரன் காதல்..!

வண்ண நிலவே வண்ண நிலவே வருவது நீதானா.. நீ வருகையிலே வாசனைகள் வருகிறதே.. நிஜம் தானா என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சிம்ரன் என்றாலே தென்னிந்திய ரசிகர்களின் மத்தியில் கேட்கவே வேண்டாம்.

கனவு கன்னியாக ஒவ்வொரு இளைஞர்களின் மனதிலும் இடம் பிடித்த இவர் இடுப்பு அசைவில் மயங்கி கிடந்த இளசுகள் அதிகம் என்று சொல்லலாம்.

90-களில் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் சக்கை போடு போட்டு ரசிகர்களின் எண்ணிக்கையை படை போல் அதிகரித்துக்கொண்ட நடிகை சிம்ரன் தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கி இருக்கிறார்.

நடிகை சிம்ரன்..

நடிகை சிம்ரன் தமிழில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த அத்தனை நடிகர்களோடும் ஜோடி போட்டு நடித்து இளசுகளை இரவில் தூங்க விடாமல் ரகளை செய்தவர்.

அந்த வகையில் இவர் தற்போது பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் ராஜசுந்தரம் உடன் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.அந்த வகையில் இவர்கள் காதலித்து வந்ததாகவும் அப்படி காதலித்து வந்த இவர்களது உறவானது திருமணம் வரை சென்று பின் நின்று விட்டது என்ற தகவல் தற்போது இணையங்களில் பெரிய அளவு கசிந்துள்ளது.

அவர்கள் காதல் ஏன் உடைந்தது. அதற்கு என்ன காரணம் என்ற ரீதியில் பலரும் பல்வேறு விதமான சந்தேகங்களை எழுப்பி உள்ள நிலையில் அதற்கு உரிய விடையும் தற்போது கிடைத்துள்ளது.

இதற்கான காரணம் என்ன? எதனால் ராஜசுந்தரம் மற்றும் சிம்ரன் இடையே இருந்த அந்த காதல் பிரேக்கப்பில் முடிந்தது என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஒரே லிப் லாக் காட்சி..

நடிகை சிம்ரன் கமலஹாசன் உடன் இணைந்து பஞ்சதந்திரம், பம்மல் கே சம்பந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடிக்கும் போது இவர்கள் இருவரையும் சம்பந்தப்படுத்தி கிசுகிசுக்கள் எழுந்தது உங்கள் நினைவில் இருக்கிறதா?

எனினும் அந்த சமயத்தில் அது பற்றி மூச்சு விடாத இவர்கள் இருவரும் தங்கள் கேரியரில் கவனத்தை செலுத்தி வந்த நிலையில் கமல் படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்ததால் தான் சிம்ரனை வேண்டாம் என்று ராஜசுந்தரம் பிரேக்கப் செய்துவிட்டார் என்று ஒரு தகவல் தற்போது புகைந்துள்ளது.

இந்த தகவல் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. எனினும் இணையம் முழுவதுமே இந்த விஷயம் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது தான் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

பிரேக்கப்பில் முடிந்த சிம்ரன் காதல்..

இதனை அடுத்து இந்த காரணத்தால் தான் சிம்ரன் ராஜசுந்தரம் இடையே இருந்த காதல் பிரேக்கப்பில் முடிந்ததா? என்று வாய்ப்பிளந்திருக்கும் ரசிகர்கள் அனைவரும் அட.. இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவே இல்லை என்று ஆழ்ந்த கவலைகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

எனினும் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் இது வரை எந்த விதமான கருத்துகளையும் சொல்லாத நிலையில் இதன் உண்மை நிலை என்ன என்பது தெரியாமல் யாரும் இதனை அதிக அளவு விமர்சனம் செய்ய வேண்டாம் என்று எண்ணுகிறார்கள்.

அத்துடன் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தைப் பற்றி இணையங்களில் வேகமாக காட்டு தீ போல பரப்பி வருவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களுக்கும் விசயத்தை சொல்லி ஆச்சிரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …