ஆணுறை என்பது இதுக்கு மட்டுமில்ல.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்..!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையான ரகுல் பிரீத் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வரும் இவர் இப்போது டெல்லியில் பிறந்து வளர்ந்தார்.

இவர் முதன்முதலில் கன்னட திரைப்படம் ஆன கில்லி என்ற படத்தில் 2009 ஆம் ஆண்டில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்:

கல்லூரியில் மாடலாக வேலை செய்து வந்த இவர் அதன் பிறகு பெமினா மிஸ் இந்தியா அலங்கார அணி வகுப்பில் கலந்து கொண்டு 2019 ஆம் ஆண்டில் ஐந்தாவது இடத்தை பெற்றார்.

அதன் மூலம் தான் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. எனவே மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு நடிகையாக அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் தடையறதாக என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டும் ரகுல் பிரீ சிங் தமிழில் நடித்திருக்கிறார்.

புது டெல்லி பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் ஆன ரகுல் ப்ரீத் சிங் ராணுவ பள்ளியில் பயின்று அதன் பிறகு டெல்லி பல்கலைக்கழகத்தில் கணித பாடங்களைப் படித்தார் .

தன்னுடைய சிறு வயது முதலே எப்போதுமே நடிகை ஆக வேண்டும் என்ற கனவை கண்டு கொண்டிருந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் 18 வயதிலேயே மாடலிங் துறையில் தனது தொழிலை தொடங்கினார்.

அதன் பிறகு விளம்பர திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த அவர். 2009 ஆம் ஆண்டு தான் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

சினிமாவில் அறிமுகம்:

கில்லி படத்தில் நடித்து கன்னட சினிமாவில் அறிமுகமானார் ரகுல் பிரீத் சிங். இந்த படம் செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் கன்னட ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சியமாகி பிரபலமான நடிகையாக இடத்தைப் பிடித்து விட்டார்.

ரகுல் பிரீத் சிங் பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளரும் ஆன Jackky Bhagnani என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆணுறை என்பது இதுக்கு மட்டுமில்ல…

திருமணத்திற்கு பிறகும் ரகுல் பிரீத் சிங் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆணுறை என்பது ஆண்களின் பாதுக்காப்புக்கு மட்டுமல்ல..அது பெண்களின் பாதுக்காப்புக்கும் தான்.

பாதுக்காப்பான உறவாக அமையவில்லை என்றால் கரு உருவாகிவிடும். அந்த கருவை சுமப்பது பெண் தானே.

பலரும் ஆணுறையை ஒரு நோய் தடுப்பு சாதனம் என்ற கண்ணோட்டத்திலேயே பார்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேல் தேவையற்ற கரு உருவாவதை தடுப்பது இந்த ஆணுறை என சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

ரகுல் ப்ரீத் Chhatriwali இந்தி என்ற படத்தில் ஆணுறை பரிசோதகராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

அட அஞ்சலியா இது..? என்ன இப்படி இறங்கிட்டாங்க..? தீயாய் பரவும் படுக்கயறை காட்சி..!

நடிகை அஞ்சலி சமீபத்தில் தான் நடித்த Bahishkarana என்ற வெப் தொடரில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் படு …