பல பெண்களுடன் வீட்டிலே உல்லாசம்… கர்ப்பிணி மனைவி வயிற்றில் எட்டி உதைத்த நடிகர்.. பதைபதைக்க வைக்கும் நடிகையின் அழுகை..!

தற்சமயம் கேரளாவில் நடந்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விஷயங்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. இந்த நிலையில் கேரளாவின் பிரபல நடிகரான நடிகர் முகேஷ் மீது எழுந்திருக்கும் குற்றங்கள் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

இதற்கு நடுவே அவரது முன்னாள் மனைவியான சரிதா அவரைக் குறித்து சர்ச்சையான தகவல்களை கூறி இருக்கிறார். நடிகர் முகேஷ் வெகு காலங்களாகவே மலையாளத்தில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார்.

வீட்டிலே உல்லாசம்

தமிழில் இவர் சுந்தர் சி நடித்த ஐந்தாம் படை திரைப்படத்தில் அவருக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் அறியப்படுகிறார். இதுவரை 250க்கும் அதிகமான திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

அதே சமயம் அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த முகேஷ் தற்சமயம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரை குறித்து நிறைய சர்ச்சையான தகவல்கள் வெளியில் பரவி வருகின்றன இதற்கு நடுவே அவரது முன்னாள் மனைவியான நடிகை சரிதா கூறி இருக்கும் விஷயங்களும் கவனம் பெற தொடங்கியிருக்கின்றன.

நடிகை சரிதா தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகை ஆவார் நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மா கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

வயிற்றில் எட்டி உதைத்த நடிகர்

இந்த நிலையில் இவர் முகேஷை திருமணம் செய்து கொண்ட போது இவருக்கு நடந்த அனுபவங்களை அவர் பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார் அதில் கூறும்போது பெண்களை துளியும் மதிக்க தெரியாதவர் முகேஷ். அவர் திருமணம் ஆன முதலே என்னை அவரது தந்தை முன்னாடியே வைத்து கொடுமை செய்வார் அடிப்பார் என்று கூறியிருக்கிறார் சரிதா.

இப்படி தொடர்ந்து தனது வீட்டில் கொடுமைகளை நடந்து வரும் காரணத்தினால் அதை தனது பிள்ளைகளை பாதிக்க கூடாது என்று நினைத்தார் சரிதா. எனவே எனது பிள்ளைகளை போர்டிங் ஸ்கூலில் சேர்த்து அங்கேயே தங்கி படிக்கும்படி செய்தார்.

ஆனால் தினசரி அவர் வீட்டில் அடிவாங்கிக் கொண்டுதான் இருந்தார் அதேபோல அவர் கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் அவர் வயிற்றிலேயே உதைத்துள்ளார் முகேஷ்.

நடிகையின் அழுகை

அதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளானார் சரிதா. அதன் பிறகு சினிமா வாழ்க்கை மட்டுமல்லாமல் தன்னுடைய சொந்த வாழ்க்கையையும் இழந்து விட்டதாக அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இது மட்டுமன்றி அவர் தொடர்பில் இருக்கும் பெண்களை எல்லாம் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுடன் உல்லாசமாக இருப்பார் முகேஷ் என்று கூறுகிறார் சரிதா.

அதற்கு பிறகு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் முகேஷ். ஆனால் அந்த திருமணமும் அவருக்கு நிலைக்கவில்லை. இந்த நிலையில் ஹேமா கமிட்டியில் வெளிவந்த அறிக்கையின்படி ஒரு நடிகை இவர் மீது குற்றச்சாட்டு எழுப்பி இருக்கிறார். நடிகை சங்கத்தில் இணைவதற்கு அவரிடம் கேட்டபொழுது அதற்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் அழைத்ததாக அந்த நடிகை புகார் அளித்து இருக்கிறார்.

இதனை அடுத்து முகேஷ் எம்.எல்.ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் குரல் எழுப்ப தொடங்கி இருக்கின்றனர். தனது பதவிக்கு ஆபத்து வந்த காரணத்தினால் முதலமைச்சருக்கு குறித்து கடிதம் எழுதி இருக்கிறார் முகேஷ்.

அதில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் அந்தப் பெண் திட்டமிட்டு தன்னை பலி வாங்குவதாகவும் அவர் கூறியிருந்தார். இப்படி சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில் சரிதாவின் இந்த பழைய பேட்டி தற்சமயம் பிரபலமாக துவங்கி இருக்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …