ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை கஸ்தூரி அதனைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் நடிகை கஸ்தூரி. இவர் மீது ஆரம்ப காலம் முதலே பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அத்தனை விமர்சனங்களையும் தனியாளாக தில்லாக எதிர்த்து பதில் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்.
சினிமா ஹீரோயினாக இருக்கும் போது தன்னிடம் பலர் அவர்களுடைய தனிப்பட்ட ஆசையை வெளிப்படுத்தி படுக்கைக்கு அழைத்தனர் என்று பகிரங்கமாக போட்டுடைத்தார் நடிகை கஸ்தூரி.
சமூகப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை என அடிக்கடி தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பத்தல பத்தல என்ற பாடலின் மூலம் நடிகர் கமலஹாசன் கோயம்புத்தூர் தொகுதியில் வானதி சீனிவாசன் அவர்களிடம் தோற்ற கடுப்பில் தான் இப்படியான பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்று வெளிப்படையாகவே கூறினார். அவரது இந்த கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாராப்பை விலக்கி விட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி இருட்டில் நின்று கொண்டு மங்கிய வெளிச்சத்தில் படுபயங்கரமான சூட்டைக் கிளப்பும் அதுபோன்ற கவர்ச்சி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகல என்று வர்ணித்து வருகின்றனர்