“என் உடம்புல இதை பண்ணனும்ன்னு ஆசை..” மேடையில் கூச்சமின்றி ஓப்பனாக கூறிய ஜோதிகா..!

நடிகை ஜோதிகா இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவருடைய மார்க்கெட் எந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பார்த்ததும் ஈர்க்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம், எடுப்பான முன்னழகு , சுண்டி இழுக்கும் பின்னழகு என கவர்ச்சி சிலையாக இருந்த நடிகை ஜோதிகாவிற்கு பட வாய்ப்புகள் மலை போல குவிந்தன.

திரைப்படங்களில் குடும்ப குத்துவிளக்காகவும் அதே சமயம் பாடல்களில் கவர்ச்சியாகவும் நடிக்கும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட டிமாண்ட். இதனை கணக்கச்சிதமாக செய்யும் நடிகைகள்  நம்பர் ஒன் நடிகைகளாக வலம் வருவார்கள்.

அந்த வகையில், நடிகை சிம்ரன் இந்த யுக்தியை கையாண்டார். கதையின் ஓட்டத்தில் குடும்ப குத்து விளக்காக நடிக்கும் சிம்ரன் அதுவே பாடல் காட்சி என்று வந்துவிட்டால் ஆடைகளை குறைத்துக் கொண்டு அங்கங்கள் எடுப்பாக தெரிய சூடான கவர்ச்சி ஆட்டம் போடுவதையும் வாடிக்கையாக கொண்டு இருந்தார்.

அந்த சூத்திரத்தை அப்படியே தன்னுடைய திரை வாழ்க்கையில் காப்பி செய்தவர் நடிகை நயன்தாரா. அவர்தான் தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார். இடையில் நடிகை ஜோதிகாவும் நடிகை சிம்ரனுக்கு மிகப்பெரிய போட்டியாக இருந்தார்.

ஏனென்றால் அவரும் கதையில் குடும்ப குத்துவிளக்காகவும் அதே பாடல் காட்சி என்று வரும்போது எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியிலும் இறங்கி கலக்க தயாராக இருந்தார்.

இன்று பல நடிகைகள் நான்கு அல்லது ஐந்து படங்களில் காணாமல் போய்விடுவதற்கு காரணம் இதுதான். நடித்தால் படத்திலும் கவர்ச்சி பாடலிலும் கவர்ச்சியாக நடிக்கிறார்கள். அல்லது படத்திலும் குடும்ப குத்துவிளக்காக தான் நடிப்பேன் பாடலிலும் தாவணி அல்லது புடவையை சுத்திகிட்டு தான் ஆடுவேன் என்று இருக்கிறார்கள். இதனாலேயே பல்வேறு நடிகைகள் மார்க்கெட் அவுட் ஆகி தற்போது பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள்.

இப்படி இந்த தந்திரத்தை அருமையாக கையாண்டு வெற்றி பெற்ற வெகு சில நடிகைகளில் நடிகை ஜோதிகாவும் ஒருவர். நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு அரசியல் கருத்துக்கள் குறித்து மேடையில் பேசி வந்தார் நடிகை ஜோதிகா. ஆனால் தற்போது அரசியல் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார்.

உச்சகட்டமாக தஞ்சை பெரிய கோயிலை முன்னுதாரணமாக காட்டி கோயிலுக்கு டொனேஷன் கொடுப்பதை விடவும் மருத்துவமனைக்கு டொனேஷன் கொடுங்கள் மருத்துவமனைகள் முன்னேறட்டும் என பேசி இருந்தார்.

இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. நீங்கள் சொன்ன விஷயம் தவறு கிடையாது. ஆனால், அதற்கு தெற்காசியாவின் அடையாளமாக இருக்கும் ஒரு கோயிலை அடையாளம் காட்டுவதா..? என்று நடிகை ஜோதிகாவை பலரும் விமர்சிக்க தொடங்கினார்கள்.

இந்த விமர்சனம் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகாவிடம் தற்போது நடிகர்கள் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார்கள்.

அப்படி அரசியல் கட்சியில் சேர்ந்து பயணிக்க விரும்புகிறீர்களா…? அரசியல் கட்சியில் சேர்வதற்கு உங்களுக்கு ஏதேனும் அழைப்பு வந்ததா..? என்று நடிகர் விஜயின் கட்சியை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக ஒரு கேள்வியை எழுப்பினார் செய்தியாளர்.

இதைக் கேட்ட நடிகை ஜோதிகா எனக்கு அரசியல் கட்சியில் சேர எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. தற்போதைக்கு அரசியலில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை. நான் என்னுடைய குடும்பம் குழந்தைகள் என கவனித்துக் கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது.

முதலில் நான் என்னுடைய உடம்பில் சீர்திருத்தங்களை கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கிறேன்.

என்னுடைய உணவு முறைகளை மாற்றி இருக்கிறேன். உடற்பயிற்சி செய்கிறேன். தற்போது என்னுடைய கவனம் முழுதும் என் மீதும்.. என் குடும்பத்தின் மீது மட்டும் தான் இருக்கிறது.

இதை தாண்டி அரசியலில் எனக்கு தற்போதைக்கு ஆர்வமில்லை என கூறினார். தற்போதைக்கு ஆர்வமில்லை என்றால்.. ஒரு வேலை எதிர்காலத்தில் இவருக்கு அரசியல் ஆர்வம் வருமோ..? என்ற கேள்வியும் எழுப்புகிறார்கள்  ரசிகர்கள்.

மறுபக்கம் குறிப்பிட்ட கட்சி ஆட்சியில் இருக்கும் போது எந்த திட்டம் வந்தாலும் அதனை சுட்டிக்காட்டும் விதமாக அதனை குறை கூறும் விதமாக ஏதாவது ஒரு கருத்தை பேசிக்கொண்டு இருந்தார் நடிகை ஜோதிகா மற்றும் அவருடைய கணவர் சூர்யா.

ஆனால், தற்போது வாயை திறக்காமல் இருக்கின்றனர். மேடையில் இது பற்றி கேள்வி எழுப்பினால் கூச்சமே இல்லாமல் முதலில் என்னுடைய உடம்பு தான் எனக்கு முக்கியம் என்று பதில் அளிக்கிறார்கள். இதெல்லாம் என்ன வகையான நோய் என்று தெரியவில்லை என நடிகை ஜோதிகாவை விமர்சிக்கும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …