ஜெயம் ரவி பேசியதின் பகீர் பின்னணி.. 6 மாதத்தில் திருமணமா? பிசினஸா?

பல வாரங்களாகவே இணையங்களில் ஜெயம் ரவி குறித்தும் அவர் விவாகரத்து அறிக்கை விடுத்தது பற்றி பல்வேறு வகையான கருத்துக்கள் வெளி வந்தது.

அது மட்டுமல்லாமல் இவர் அறிவித்த விவாகரத்தை இவரது மனைவி ஆர்த்தி ரவி ஏற்றுக்கொள்ளாமல் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் எதிர்காலம் என்ன என்ற கேள்வியை எமோஷனலாக கேட்டிருந்தார்.

ஜெயம் ரவி பேசியதின் பகீர் பின்னணி..

இந்நிலையில் ஜெயம் ரவி கோவாவில் பப் பாடகையோடு குடும்பம் நடத்துவதாக அரசல் புறசலாக செய்திகள் வெளி வந்து இருந்தது. மேலும் ஆடி காரில் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்ற விஷயங்கள் இணையம் முழுவதும் கசிந்தது.

இதை அடுத்து ஜெயம் ரவி நேற்று பிரதர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்திருந்தார். இந்நிலையில் சென்னையில் தன் கணவரை எப்படியும் சந்தித்து விட வேண்டும் அதுவும் தன் மகன்களை அழைத்துக்கொண்டு சந்தித்தால் கட்டாயம் மனம் மாறுவார் என்று ஆர்த்தி நினைத்தார்.

ஆனால் அந்த மாதிரி நிகழ்வு ஏதும் நடக்கவில்லை. எனினும் எந்த பிரதர் பட பாடல் வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்து ஜெயம் ரவி எப்போதும் இல்லாத அளவு கோபமாக பேசி இருக்கிறார்.

இவர் அந்த பேட்டியில் வாழு, வாழ வழி விடு என்ற வார்த்தைகளை சொன்னதோடு பாடகி ஜெனிஷா ஒரு மிகச்சிறந்த பெண் பல மேடைகளில் பாடல்களை பாடி இருப்பதாலும் பலரது உயிரினை காப்பாற்றிய ஹீலர் என்ற விஷயத்தை கூறியிருக்கிறார்.

6 மாதத்தில் திருமணமா? பிசினஸா?

அதுமட்டுமல்லாமல் தன்னையும் அவரையும் இணைத்து பேசுவது தவறு அதில் உண்மை இல்லை என்று கோபத்தோடு கூறிய ஜெயம் ரவி வருங்காலத்தில் அவரோடு இணைந்து மக்களுக்காக ஹீலர் சென்டர்களை ஆரம்பித்து நடத்தலாம் என்ற திட்டத்தில் இருப்பதாக கூறினார்.

எனவே இனிமேலாவது தன்னை அவரோடு இணைத்து பேச வேண்டாம் என்று கூறியதோடு சினிமாவில் கூட இந்த அளவுக்கு கிசுகிசுகளில் தான் சிக்கியது இல்லை என்ற விஷயத்தையும் கூறி இருக்கிறார்.

ஏற்கனவே தனது மனைவி ஆர்த்தியின் அம்மா அப்பாவோடு கலந்து உரையாடிய பிறகு தான் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக சொல்லி இருக்கக்கூடிய ஜெயம் ரவி இது எப்படி ஆர்த்திக்கு தெரியாமல் போனது என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்.

இதனை அடுத்து ஜெயம் ரவி கோவாவில் இருந்து வந்து இந்த படத்திற்கான டப்பிங் விஷயங்களை கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு செய்துவிட்டு சென்றிருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி ஆர்த்தியை விவாகரத்து செய்வது உறுதியானது போல அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் இவர் இப்படி பேசியதற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்ற விஷயம் வேகமாக பரவி வருகிறது.

இந்தப் பாடகி ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் தற்போது ஜெயம் ரவியோடு லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வருவதாக பேச்சுக்கள் தற்போது அடிபட்டு வருகிறது.

மேலும் விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். அத்தோடு ஹீலிங் சென்டர்களை ஆரம்பித்து பிசினஸ் செய்யலாம் என்ற ரீதியில் தற்போது கருத்து இணையங்களில் வெளிவர ஆரம்பித்துள்ளது.

About Brindha

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …