கொத்தவரை வத்தல்

இன்று பொதுவாக நிறைய நபர்களுக்கு நீரழிவுநோய் உள்ளது இவர்கள் குறுந்தீனிகள் தின்பதை தவிர்த்து இந்த கொத்தவரை உண்பதன் மூலம் உடலில் இன்சுலின் சுரப்பை இயற்கையான முறையில் அதிகரிக்கலாம்.

அதிகளவு புரதச்சத்துகள், கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. 

கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

தேவையான பொருட்கள்

கொத்தவரை காய் ஒரு கிலோ 

தேவையான அளவு உப்பு 

தேவையான அளவு மிளகாய்த்தூள்

செய்முறை

கொத்தவரங்காயை நன்றாக நீரில் அலசி எடுத்துக் கொண்டு அனைத்தையும் குக்கரில் போட்டு சிறிதளவு நீரை விட்டு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் போட்டு கொள்ளவும்.

பின்னர் குக்கரை மூடி ஆவி வந்தபின்  இசையினை போட்டுவிட்டு இரண்டு விசில் விட்டு இறக்கி விடவும்.

ஆறிய பின் குக்கரை திறந்து கொத்தவரங்காயை  பருத்தி துணியில் போட்டு வெய்யிலில் உலர்த்தி விடவும்.

இதனை 2 முதல் 5 நாட்கள் வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது.

இரத்தச் சோகை இருப்பவர்கள் கொத்தவரங்காயை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சோகை நீங்கி உடலை மீண்டும் ஆரோக்கியமான நிலைமைக்கு கொண்டு வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …