கருப்பு வெள்ளை சினிமா காலங்களில் இருந்து சினிமாவில் கிசுகிசுக்கள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சினிமாவில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் யாராவது ஒரு பிரபலம் தொடர்ந்து சினிமாவில் இருக்கும் ரகசிய தகவல்களை பத்திரிகையாளர்களுக்கு கசிய செய்வது உண்டு.
அதனை பத்திரிகையாளர்களும் இலை மறை காயாக எழுதி பத்திரிகைகளில் வெளியிடுவார்கள். பெரும்பாலும் அதை படிக்கும் மக்களுக்கு எந்த நடிகரை குறிப்பிட்டு பத்திரிகையாளர் இப்படி எழுதி இருக்கிறார் என்பது புரிந்துவிடும்.
இதுதான் கிசுகிசுவின் அம்சமாக இருந்து வந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல கிசுகிசுக்களை பார்த்து சினிமா பிரபலங்கள் பயப்பட துவங்கினார்கள்.
ஷகிலா செய்த சம்பவம்
அவர்களது உண்மைகளை பத்திரிக்கையாளர்கள் மறைமுகமாக எழுதுகின்றனர். ஆனால் அதை கேள்வி கேட்கவும் முடியாது என்கிற நிலை சினிமா பிரபலங்களுக்கு இருந்து வந்தது.
இதனாலையே ஆரம்ப காலகட்டத்தில் இருந்து கிசுகிசுக்களை எழுதும் பத்திரிகையாளர்களை சினிமா பிரபலங்களுக்கு பிடிக்காது. அந்த வகையில் தற்சமயம் அதிகமாக சினிமா பிரபலங்களால் வெறுக்கப்படும் ஒரு பிரபலமாக பயில்வான் ரங்கநாதன் இருந்து வருகிறார்.
பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக துணை நடிகராக இருந்தவர்.
அவர் நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதனால் ஆரம்ப காலகட்டம் முதல் தமிழ் சினிமாவில் இருக்கும் கிசுகிசுக்கள் பலவற்றையும் தெரிந்து வைத்திருந்தார். இறுதி நாட்களில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போகவே தற்சமயம் தொடர்ந்து நடிகைகள் குறித்தும் அவர்களது அந்தரங்க விஷயங்கள் குறித்தும் வீடியோக்களை வெளியிடுவது அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
பிரபலம் செய்த வேலை
இது பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருமுறை ஒரு விழாவில் அவர் கேள்வி கேட்க வந்த பொழுது நடிகர் விஷால் அவருக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அந்த அளவிற்கு சினிமா பிரபலங்களுக்கு பயில்வான் ரங்கநாதன் மீது கட்டுக்கடங்காத கோபம் இருந்து வருகிறது.
மேலும் சிலர் கூறும்பொழுது அவர் கூறுவது அனைத்தும் உண்மை கிடையாது என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து ஒரு பேட்டியில் சகிலா அவரிடம் நேரடியாகவே கேட்டிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ஊர் உலகத்தில் இருக்கிற எல்லா நடிகைகளின் கிசு கிசுக்களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்களே உங்க பொண்ண பத்தி தெரியுமா?
அடக்கொடுமையே
உங்க பொண்ணு இன்னொரு பொண்ண காதலிச்சுக்கிட்டு இருக்காங்க அது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்கவும் திடுக்கிட்டு அதிர்ச்சி அடைந்தார் ரங்கநாதன். இந்த பேட்டி முடிந்ததை எடுத்து வேக வேகமாக தனது பெண்ணுக்கு திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.