சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகும் சில நடிகைகள் ஒரே படத்தில் நடித்தாலே புகழின் உச்சிக்கு சென்று விடுவார்கள்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு காலத்தை கடத்தி அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் போன பிறகு மீண்டும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க தயார் என்று தங்களுடைய பேங்க் பேலன்சை ஏற்றுக்கொள்ள கவர்ச்சியாக நடிக்க முன்வருவார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்காலம் உள்ளது என்று கணிக்கப்பட்ட நடிகையான தாமிரபரணி பானு ஆரம்பத்தில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் என்னால் நடிக்க முடியாது என்று தேடி வந்த பட வாய்ப்புக்களை துரத்தி விட்டார்.
இதனால் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இருந்தும். அதனை தவற விட்டுவிட்டார் தாமிரபரணி பானு. அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் ஆள் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் போனார்.
அதன்பிறகு, தான் துரத்தி விட்ட படவாய்ப்புக்களை தேடி துரத்திக்கொண்டிருந்தார் அம்மணி. அதன் பயனாக, ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் நடிகையாக இறங்கிவந்த தாமிரபரணி பானு சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்தார்.
இவர் நடித்த முதல் படமான தாமிரபரணி படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது இவருடைய இயற்பெயரான முக்தா ஜார்ஜ் என்பதை தாமிரபரணி பானு என்றே மாற்றிவிட்டது.
இந்த ஒரே ஒரு படம் தற்போது திருமணம் ஆகி இல்லற வாழ்க்கையில் செட்டிலாகி விட்ட பானு தற்பொழுதும் அழகு குறையாமல் படு கிளாமராக இருப்பதால் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது