பப்பாளி எல்லா இடங்களிலும் வளரக்கூடிய தன்மை கொண்ட மரம். அன்றாடம் நாம் சாப்பிடும் பழங்களில் இருக்கும் மருத்துவ நன்மைகளை விட இந்த பப்பாளி இலையில் இருக்கும் மருத்துவக் குணங்களும் நன்மைகளும் மிக அதிகமாக உள்ளது.
இந்த பப்பாளி மரத்தின் இலை மட்டுமல்ல பூ பட்டை வேர் பழம் அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்துள்ளது.
பப்பாளி இலை…
பப்பாளி இலையில் அதிகளவு பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் என்னைப்போன்ற நிரம்பி களும் கால்சியம் பொட்டாசியம், சோடியம் மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்களும் அதிக அளவு உள்ளது.
எனவே பப்பாளி இலையில் ஜூஸ் செய்து குடித்து வந்தால் நாம் ஏராளமான நன்மைகளை பெறலாம்.
பப்பாளி இலை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
நமது உடம்பில் ஓடும் ரத்தத்தில் ரத்தத் தட்டுக்கள் குறைந்தால் அது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். பப்பாளி இலைச்சாறு தொடர்ந்து குடித்து வந்தால் ரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம்.
பப்பாளி இலையின் சாறு நமது உடலிலுள்ள கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மஞ்சள் காமாலை கல்லீரல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படாமல் தடுக்கிறது.
நமது உடம்பில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி மலேரியா, டெங்கு காய்ச்சல், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் பணியை பப்பாளி இலைச்சாறு செய்கிறது.
அன்றாடம் நாம் பப்பாளி இலைச் சாறு பருகி வந்தால் அது உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை தடுத்து உடலை நன்கு பாதுகாக்கிறது.
வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனைகள் ஒவ்வாமை அலர்ஜி போன்ற சரும பிரச்சனைகள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, நீரழிவு நோய், பக்கவாதம் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக இந்த பப்பாளி இலைச்சாறு உள்ளது.
பப்பாளி இலை சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது. பப்பாளி இலையில் பேப்பேயன் அல்கலாய்டு phenolic வேதிப் பொருட்கள் உள்ளது.
டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை அலோபதி மருத்துவத்தில் மருந்து கிடையாது. நமது சித்த மருத்துவத்தில் பப்பாளி இலைச்சாறு இந்த நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
இதிலுள்ள ஏழுவகை பீனால் சேர்மங்கள் மற்றும் குவர் செட்டின் எனும் பிளேவனாய்டு வகை வேதிப்பொருள் டெங்கு வைரஸ் அதிலுள்ள ns2 b ns3 மூலக்கூறுகளை அழிக்கிறது.எனவே வாரத்தில் ஒருமுறையாவது பப்பாளி இலைச்சாறு சாப்பிட்டு வந்தால் நாம் ஆரோக்கியமாக வாழலாம்