தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் அதிகப்படியான எபிசோடுகள் ஓடிய சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை ஸ்வேதா பண்டேகர்.
2014 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் தற்பொழுது 2022 ஆகியும் முடிவதாக தெரியவில்லை கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.
இன்னும் எட்டு ஆண்டுகள் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. என்னதான் சீரியல் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருந்தாலும் இவர் முதன் முதலில் அறிமுகமானது சினிமாவில்தான்.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்து இருந்த இவர் அதை தொடர்ந்து வள்ளுவன் வாசுகி, பூவா தலையா, உள்ளிட்ட சினிமா படங்களில் நடித்துள்ளார்.
பொதுவாக ஒரு படத்தில் நடித்தாலே அந்த கதாபாத்திரத்தில் இருந்து மீண்டு வருவது கடினமான விஷயம் என்பது பல நடிகர் நடிகைகள் சொல்லி நாம் கேட்டு இருக்கிறோம் ஆனால் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் ஒரே சீரியலில் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறுகிறார் ஸ்வேதா பண்டேகர்.
எந்த மாதிரியான காட்சி என்றாலும் அசத்தலாக நடித்து வரும் இவருக்கு அழுவது போன்ற காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் செய்யக்கூடிய காட்சிகள் என்றால் மிகவும் கடினமான விஷயம் என்கிறார்.
ஏனென்றால் கண்ணில் அவ்வளவு எளிதில் இவருக்கு தண்ணீர் வந்து விடாது என்றும் அப்படியே கிளிசரின் உபயோகப்படுத்தி கண்ணீர் வர வைத்தாலும் எனது இடது கண்ணில் மட்டும் தான் தண்ணீர் வரும் எனவும் கூறுகிறார்.
View this post on Instagram
அதேபோல ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யும் விஷயத்திலும் நான் ரொம்ப வீக்கு என்று கூறுகிறார் ஸ்வேதா பண்டேகர். இந்நிலையில் சக சீரியல் நடிகையுடன் படுக்கையில் குத்தாட்டம் போடுவது வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.