ரெஜினா என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது.. எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப் போறேன் என்ற பாடல்தான் என்றால் அந்த அளவுக்கு அந்தப் பாடலில் கவர்ச்சியில் அதகளம் செய்திருப்பார் ரெஜினா .
தமிழ் தெலுங்கு இந்தி என பல இந்திய மொழிப் படங்களில் பிரபல நடிகையாக வலம் வரும் ரெஜினா சமீபத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து குத்தாட்டம் போட்ட பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இது குறித்து பேசிய ரெஜினா பல படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் வாய்ப்பு எனக்கு வந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பது சரி ஒரே மாதிரியான ஐட்டம் பாடல்களில் ஆடுவதும் சரி என் மீது ரசிகர்களுக்கு இருக்கும் நடிகை என்ற பிம்பத்தை உடைத்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.
எனவே இப்படியான வாய்ப்புகளை நான் தேர்வு செய்வதில்லை. சில வருடங்களுக்கு முன்பு சிரஞ்சீவியுடன் ஆடும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது அதன் பிறகு அதே போல நடனமாடும் வாய்ப்புகள் என்னை தேடி வந்தன.
ஆனால் அவற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். மீ டு ட்ரெண்டிங்கில் இருந்தபோது பதின்ம வயதில் என்னை ஒரு நபர் உதட்டை பிடித்து இழுத்து என் முன்பு அருவருப்பான விஷயங்களை செய்ததாகவும் பதிவு செய்து அதிர்ச்சியை கிளப்பினார் ரெஜினா.
இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை வர்ணித்து கமெண்ட்டி வருகின்றனர்.