சொப்பன வாராஹி

சொப்பன வராகி என்று ஒரு அன்னை இருக்கின்றாள் இந்த அன்னையை உபாசனை செய்து இவளில் அருள் நமக்கு கிட்டிவிட்டால்,நமது எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் கனவில் வந்து பதில் கூறுவாள் எத்தனை முறை அழைத்தாலும் சலிக்காமல் வந்து பதிலளிப்பாள் தமிழ்நாட்டில் பலர் இந்த அன்னையின் அருள் பெற்று பிறருக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்

சொப்பனத்தில் வந்து பதில் தரும் தெய்வங்கள் சில இருக்கின்றன பத்மாவதி, எட்சிணி, வராகி போன்றவை இன்றும் பலருக்கு வழிகாட்டியாக இருக்கின்றன

சொப்பன வராகி மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வர, வராகி அருளால் சகல சித்திகளும் கூடி வரும் துஷ்ட பிரயோகங்களால் (ஜின்,குறளி,மோகினி) அவதிப்படுபவர்கள் தினமும் வராகி மந்திரத்தை ஜபித்து வர அதில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம் அம்பாள் உபாசனை, ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்களுக்கு வராகி மந்திரம் மிகப் பெரிய மஹா சக்தி வாய்ந்த கவசம் ஆகும்

வராகியின் சக்தியை மனித மனத்தினால் மதிப்பிடவே முடியாது.வராகியின் 13 பெயர்களை ஜபித்து வந்தால் இப்பிறவி முழுவதும் எதிரிகளும், துரோகிகளும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்

தன்னைச் சரணடைந்தவர்களை பாதுகாக்க எப்பேர்ப்பட்ட மந்திரவாதியாக இருந்தாலும், அவனது மாந்திரீக ஆற்றல்களை ஒரே விநாடியில் நிர்மூலமாக்கிவிடுவாள். தனிமையில் செல்லும் போதும்இரவில் சுடுகாடு/இடுகாடு வழியாக செல்லும் போதும் இரவில் வெளியூரில் இருந்து வீடு திரும்பும் போதும் அன்னை மஹா வராகியின் பெயர்களை தினமும் ஒரு மணி நேரம் ஜபித்து வந்தால், ஆவிகள், பேய்கள், பிசாசுகளின் தாக்கம் நெருங்காது

அன்னை மஹாவராகியின் மந்திரம் எதுவாக இருந்தாலும், குரு ஒருவர் உபதேசம் செய்த பின்னர், ஜபித்தால் மட்டுமே அன்னையின் அருள் கிட்டும் ஆன்மீகத்தில் இன்றைக்கு உண்மையான குருமார்கள் குறைந்துவிட்டார்கள் எனவே,அன்னை மஹாவராகியிடம் மன்றாடி வேண்டிக் கொண்டு மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கலாம் அதன் மூலமாக அன்னையே கனவில் வந்து உபதேசம் செய்வாள்

ஒருவருக்கு ஜாதகத்தில் எத்தனை விதமான தோஷங்கள், சாபங்கள் இருந்தாலும் அன்னை மஹாவராகியைச் சரணடைந்தாலே போதும் சொப்பன வராகி மந்திரத்தை தினமும் ஒருவர் 1008 முறை ஜபித்து வந்திருக்கின்றார் ஒவ்வொரு மாதம் ஆனதும், அவரது கடுமையான சிக்கல்கள் நிறைந்த வாழ்க்கை படிப்படியாக வசந்தம் நிரம்பியதாக மாறியிருக்கின்றது

      

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …