நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு!! இத மட்டும் எங்களால ஏத்துக்க முடியல.. புலம்பும் சரிகமப தமிழ் ரசிகர்கள்..

தற்போது தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பஞ்சம் இல்லை என்று சொல்லக்கூடிய அளவு ஒவ்வொரு நிகழ்ச்சியும் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்துள்ளது சரிகமப தமிழ் நிகழ்ச்சி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

இந்த சரிகமப நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி பேன்சர்க்கிள் உள்ளது என்றால் அது மிகையாகாது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிப் பார்க்கும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் ஒன்றாக எந்த நிகழ்ச்சி திகழ்கிறது.

நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு..

உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் எந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் தற்போது நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு என்று சொல்லக்கூடிய அளவு சரிகமப தமிழ் ஃபைனலிஸ்ட் வெற்றியாளர் சர்ச்சை ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை தந்து அப்செட்டில் இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் கடந்த சீசனில் இலங்கைச் சிறுமி சில்மிஷா வெற்றி பெற்றது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. இந்த விஷயத்தை அனைவருமே கொண்டாடி மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இந்நிலையில் இந்த சீசனில் கடந்த வாரம் மூன்றாவது பைனலிஸ்ட் யார் என்ற போட்டி படு மும்மரமாக நடந்தது. இதில் விஜய் பாடிய மழைத்துளி மழைத்துளி பாடல் ஒட்டு மொத்த அரங்கையும் கட்டி போட்டு வைத்ததோடு அவரது குரல் அனைவரையும் திகழ்த்த வைத்தது.

இத மட்டும் எங்களால ஏத்துக்க முடியல..

இதனைத் தொடர்ந்து எந்த பாட்டை பாடிய விஜய் தான் வின்னர் என்று இருந்த நிலையில் மூன்றாவது ஃபைனலிஸ்டாக சரத்தை தேர்வு செய்து இருக்கிறார்கள்.

இதைத்தான் தற்போது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அத்தோடு விஜய் எதிர்பார்த்து வெற்றியாளராக காத்திருந்த ரசிகர்கள் சரத்தின் பெயர் இந்த இடத்திற்கு என்று என்பதை அறிந்து கொண்ட பின் ஒட்டுமொத்த ரசிகர்களும் தங்களது மனநிலையை பதிவு செய்து வருகிறார்கள் அதில் இதை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு சுத்தமாக மனது ஒப்புக்கொள்ளவில்லை என்ற விவரத்தை சொல்லி இருக்கிறார்கள்.

சரத்தும் ஒரு வகையில் இதற்கு தகுதியானவராக இருந்தாலும் மக்கள் மனதை கவர்ந்தவர் அவரல்ல இதை தான் என்ற குரல் ஓங்கி ஒழித்து வருகிறது.

புலம்பும் சரிகமப தமிழ் ரசிகர்கள்..

மேலும் சரிகமப தமிழ் ரசிகர்கள் இதனால் புலம்ப ஆரம்பித்து இருப்பதோடு மக்கள் மனதை கொள்ளை கொண்ட விஜய் தான் அந்த இடத்திற்கு தகுதியானவர் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் விஜய் தேர்வாகாததை தங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதையும் உடைத்து விட்டார்கள்.

இந்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி விஜய் எப்படி கோட்டை விட்டார் என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

அத்தோடு நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு என்ற டயலாக்கை சொல்லி வரும் இவர்கள் தாங்கள் விரும்பிய விஜய் தேர்வாகாதது குறித்து அவர்களது கவலையை பதிவு செய்து இருக்கிறார்கள்.

Check Also

அவ்ளோ தான்.. எங்கள முடிச்சு வுட்டீங்க போங்க.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. தெறிக்க விட்ட சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!

ஜனனி அஷோக் : நீச்சல் உடையை சினிமா நடிகைகள் தான் அணிய வேண்டுமா..? ஏன் சீரியல் நடிகைகள் அணியக்கூடாதா..? என்று …