ஆண் நண்பருடன் கையும் களவுமாக சிக்கிய பிரியா பவானி ஷங்கர்.. கதவை திறந்து பார்த்த போது கண்ட அதிர்ச்சி..

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாகவும் நட்சத்திர அந்தஸ்தையும் பிடித்து டாப் ஹீரோயினாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

நடிகை பிரியா பவானி ஷங்கர் :

இவர் திரைப்பட பின்னணி குடும்பத்தை சாராதவராக இருந்தாலும் தனது திறமையால் இன்று நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

திரைப்பட நடிகை ஆவதற்கு முன்னதாக முதன் முதலில் செய்தி வாசிப்பாளினியாக தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பிரியா பவானி சங்கருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது .

இதையும் படியுங்கள்: மருத்துவமனையில் ரஜினிகாந்த்..! விஜய் சொன்னதை கேட்டீங்களா..?

அதன் மூலம் தனது அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரியா பவானி ஷங்கர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை சீரியல் நடிகையாகவும் பணியாற்றினார்.

இந்த தொடர் தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் அடையாளத்தையும் பெயரையும் புகழையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

சீரியலில் பிரியா பவானி ஷங்கர்:

இந்த தொடரின் மூலம் ஒட்டுமொத்த இல்லத்தரசிகளின் கவனத்தையும் ஈர்த்தார் பிரியா பவானி சங்கர். அதை எடுத்து அவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வைபவிற்கு ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்து ஹீரோயின் ஆக அறிமுகமானார் .

priya bhavani shankar1

அது தான் அவரது முதல் திரைப்படம். இந்த திரைப்படமும் மிகச்சிறந்த படமாக வெற்றியை தேடி தந்தது. இதற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது பெற்று கௌரவிக்கப்பட்டார் நடிகை பிரியா பவானி சங்கர் .

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதையும் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

இதையும் படியுங்கள்: ரகுவரனின் வாரிசு கரண் என்ன ஆனார் தெரியுமா? பரிதாபமான நிலை..!

அடுத்தடுத்த திரைப்படங்கள்:

ஆம் கார்த்திக் ஜோடியாக கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தின் நடித்தார். பின்னர் எஸ் ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

மேலும், களத்தில் சந்திப்போம், கசடதபர, ஓ மண பெண்ணே ,குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன், பொம்மை, பீமா, இந்தியன் 2, டிமான்டி காலனி 2 உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே பிரியா பவானி சங்கருக்கு ருத்ரன் ,பொம்மை, இந்தியன் 2 , உள்ளிட்ட பல திரைப்படங்கள் தோல்வியை கொடுத்ததால் துவண்டு போயிருந்தார்.

இதனால் பிரியா பவானிசங்கர் மிக மோசமாக ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார் . இதை அடுத்து அவருக்கு டிமான்டி காலனி 2 திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்து .

அவரது மார்க்கெட்டை மீண்டும் உச்சத்தில் உயர்த்தியது. இதனால் துவண்டு போயிருந்த பிரியா பவானி சங்கர் மீண்டும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்று கேட்டீர்களானால் நடிகை பிரியா பவானி ஷங்கர் கடந்து சில வருடங்களாகவே அதாவது கல்லூரி படிக்கும் போதிலிருந்தே ராஜவேலு என்ற நபரை காதலித்து வருகிறார்.

அவ்வப்போது அவரிடம் அவுட்டிங் செல்லும் புகைப்படங்களையும் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருப்பார்.

இதையும் படியுங்கள்: எல்லாம் கேட்டுட்டு சமயத்தில் வன்மம் தீர்த்த டிடி… நயன்தாராவுக்கு செய்த சம்பவம்!..

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரியா பவானி சங்கர் தான் ஆண் நண்பருடன் காரில் அவுட்டிங் செல்ல முயன்று கையும் களவுமாக சிக்கி கொண்டதாக கூறினார்.

ஆண் நண்பருடன் கையும் களவுமாக சிக்கிய…

ஆம், பெண்கள் விடுதியில் தங்கி இருந்த பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய ஆண் நண்பருடன் காரில் கிளம்பி இருக்கிறார்.

அப்போது, கேட்டில் நின்றுகொண்டிருந்த ஹாஸ்டல் வார்டன் கார் கதவை திறக்க சொல்லி இருக்கிறார். அப்போது கண்ணாடியை மட்டும் இறக்கி இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.

தன்னுடைய ஆண் நண்பருடன் பிரியா பவானி ஷங்கர் இருப்பதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார் ஹாஸ்டல் வார்டன். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை பிரியா பவானி சங்கர் தன் வாயால் கூறியிருக்கிறார்..

அதாவது, செக்கியூரிட்டி அப்படி கேட்டதும் எனக்கு உடனே எனக்கு பயங்கரமாக கோபம் வந்துவிட்டது.

நான் செக்யூரிட்டியிடம் நீங்க யார் கேட்கிறதுக்கு? இது என்னோட டைம்… நான் எங்க வேணாலும் போவேன்.. எப்ப வேணாலும் போவேன்.

யாரு கூட வேணாலும் போவேன். நீங்க வேணா வாடர்ன் கிட்ட கூப்பிட்டு கேட்டுக்கோங்க… அப்படியே இல்லன்னா என்னோட அப்பா அம்மாவோட நம்பர் தரேன் அவங்க கிட்ட பேசிக்கோங்க.

என்ன இப்ப போனா என்ன? யார் வேணாலும் கூப்பிடு…. என்று நான் ரொம்ப ரூடா பேசினேன். அதை பார்த்து என்னோட பாய் ப்ரண்டு ஏய் என்னடி இதுக்கு முன்னாடி வந்த அப்போ நான் ரகசியமா தானே வந்து போனேன்.

இப்ப என்ன ஊருக்கே தெரியிற மாதிரி பேசிட்டயே என்று கேட்டார். அவர் அதே ஹாஸ்டலில் எனக்கு முன்பதாக வேறொரு பெண்ணை காதலித்து இருந்தார் என பிரியா பவானி சங்கர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Check Also

சற்று முன் : ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து வெளியான பரபரப்பு தகவல்..!

ரஜினிகாந்த் உடல்நிலை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன், கூலி என இரண்டு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து …