தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான பாவனா பாலகிருஷ்ணன் ஒரு பன்முக கலைஞர் ஆவார். பரதநாட்டியம், பாடகி என பன்முகத் திறமை கொண்ட இவர் தற்பொழுது கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பிஸியாக இருக்கின்றார்.
சின்னத்திரையில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நட்சத்திர தொகுப்பாளர்களில் இவரும் ஒருவர் கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகவும் தன்னை உயர்த்தி கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஸ்பெஷல் எபிசோடை தொகுத்து வழங்க சென்றார்.
அப்பொழுது இவர் முதன்முதலில் அறிமுகமான விஜய் டிவிக்கு மீண்டும் வருவாரா..? என்ற கேள்விக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு பதிலை கொடுத்தார். இதனை கேட்ட ரசிகர்கள் வளர்த்து விட்ட விஜய் டிவியை இப்படி சொல்லலாமா என்று அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
அவர் கூறியதாவது விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளையும் முழுக்க முழுக்க நகைச்சுவையான கண்ணோட்டத்தில் மட்டுமே எடுத்துச் செல்கிறார்கள். இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அப்படியான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினால் தான் அதிகப்படியான கவனம் கிடைக்கின்றது. ஆனால் எனக்கு அந்த அளவுக்கு நகைச்சுவையான நிகழ்ச்சிகளை தொகுத்து வாங்க முடியாது. அது என்னுடைய ஸ்டைல் கிடையாது. இனி அவர்களுடன் நான் எப்போதும் பணியாற்ற மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதனை கேட்ட ரசிகர்கள் உங்களுக்கு அறிமுகத்தை கொடுத்த ஒரு சேனலை பற்றி இப்படி பேசுவது முறையா..? சரியா..? என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இது ஒரு பக்கமிருக்க இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய ழகுகள் எடுப்பாக தெரியும் படியான கவர்ச்சியான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.