jayam ravi

பணம் போய் இப்ப என் வாழ்க்கை..விவாகரத்துக்கு பிறகு ஜெயம் ரவி நிலைமை..!

தமிழில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருந்தவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடித்த நிறைய திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியை கொடுத்திருக்கின்றன. அப்படி இருந்துமே கூட இப்பொழுது ஜெயம் ரவி காசு இல்லாமல் இருக்கிறார் என்பது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு விஷயமாக இருக்கும்.

ஜெயம் ரவி ஆர்த்தி என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெகு வருடங்களாக இவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் சமீபத்தில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இப்ப என் வாழ்க்கை

இது குறித்து நிறைய சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் வலம் வந்தன இந்த நிலையில் ஜெயம் ரவியின் மாமியார் தான் தொடர்ந்து ஜெயம் ரவியின் திரைப்படங்களை தயாரித்து வந்தார். அதனால் அவர்தான் ஜெயம் ரவிக்கு சம்பளமும் கொடுத்து வந்தார்.

jayam ravi

இந்நிலையில் ஜெயம் ரவியின் வங்கி கணக்கானது அவருடைய மனைவியின் பெயரில் ஓபன் செய்யப்பட்டிருந்தது அதனால் ஜெயம் ரவி எவ்வளவு தொகை எடுத்தாலும் அது குறித்து அவரது மனைவிக்கு மெசேஜ் சென்றுவிடும் என்கிற நிலை இருந்தது. அவரது மனைவி தொடர்ந்து அவரை கண்காணித்த காரணத்தினால்தான் அவர் விவாகரத்துக்கே தயாரானார் என்று கூறப்படுகிறது.

ஜெயம் ரவி நிலைமை

jayam ravi

இந்த நிலையில் ஜெயம் ரவி விவாகரத்து வாங்கப் போகிறார் என்பது வங்கி கணக்கில் உள்ள பணத்தை அவர் எடுக்க முடியாதபடி அவரது மனைவி செய்துவிட்டாராம். இந்த நிலையில் தன்னிடம் உள்ள கொஞ்ச பணத்தையும் கொண்டு தற்சமயம் தனியாக வாழ்ந்து வருகிறாராம் ஜெயம் ரவி. பி.எம்.டபிள்யூ கார்களில் பயணம் செய்த ஜெயம் ரவி இப்பொழுது சாதாரண கார்களில் பயணம் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து அவர் பேட்டியில் கூறும் பொழுது நாம் எந்த காரில் போகிறோம் என்பது முக்கியமே கிடையாது எது நம்மை சந்தோஷப்படுத்துகிறது என்பது தான் முக்கியம் என்று கூறியிருந்தார்.

--- Advertisement ---

Check Also

vijay lokesh kanagaraj

மாஸ்டர்ல வர்ற ஜே.டி ப்ரஃபசர் நெஜமாவே இருக்கார்.. அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

சினிமாவைப் பொறுத்தவரை அதில் வரும் கதைகள் எல்லாமே எங்கோ ஒரு இடத்தில் இயக்குனருக்கு உருவான கதையாகதான் இருக்கும். வெளியில் இருந்து …