bala

அடச்சீ.. நீ எல்லாம் ஒரு அப்பனா? நடுத்தெருவில் மகளிடம் இப்படியா நடப்ப.. நடிகர் பாலா மீது எக்ஸ் மனைவி புகார்..

திரை உலகில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் சிறுத்தை சிவா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது சகோதரர் நடிகர் பாலா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும் இவரும் தமிழ் திரை உலகில் துணை கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கிறார்.

bala

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மலையாள திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்க கூடிய நடிகர் பாலா அஜித் நடித்த வீரம் படத்தில் அவருக்கு தம்பிக்காக நடித்தவர். இதனை அடுத்து தென்னிந்திய மொழி படங்களில் இவருக்கு அதிகளவு ரசிகர் வட்டாரம் உள்ளது.

அடச்சீ.. நீ எல்லாம் ஒரு அப்பனா?

நடிகர் பாலாவிற்கு தமிழ் திரைப்படங்களில் அதிக அளவு வாய்ப்பு நினைத்தது போல் கிடைக்காததை அடுத்து மலையாள படங்களில் நடித்து வந்திருக்கக் கூடிய இவர் பாடகி அம்ருதாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இவர்களின் மண வாழ்க்கை சீரும் சிறப்புமாக சென்று வந்த வேளையில் இடையில் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து இருவரும் குறுகிய நாட்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.

bala

அவ்வாறு பிரிந்த நடிகர் பாலா 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்ற பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது எக்ஸ் மனைவி தன் மகளோடு தனியாக வாழ்ந்து வருகிறார்.

மேலும் இவரது முதல் மனைவியின் மகள் அவந்திகா கடந்த மாதம் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தால் இதில் என் அப்பா என்னை மிகவும் நேசிப்பதாக பல பேட்டிகளில் கூறி வருகிறார். ஆனால் அது உண்மை இல்லை என்ற உண்மையை உடைத்து விட்டார்.

நடுத்தெருவில் மகளிடம் இப்படியா நடப்ப..

மேலும் நடிகர் பாலா, அதாவது அவந்திகாவின் அப்பா ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு தன் அம்மாவை அடித்து கொடுமைப்படுத்திய வலியை தான் தற்போது வரை உணர்ந்து வருவதாகவும் தன் வேதனையை மிக அழகாக எடுத்துரைத்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் தற்போது தன்னை தன் அம்மாவின் வீட்டார் நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் தயவு செய்து எங்களின் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் என்று அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அது மட்டுமல்லாமல் நடிகர் பாலா தினமும் வழிமறித்து பல தொல்லைகளை தனக்கும் தன் மகளுக்கும் நடுத்தெரு என்று கூட பார்க்காமல் செய்து வருவதாக கடவாரா காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

bala

மேலும் அந்தப் புகாரில் தன்னுடைய மகள் வெளியே செல்லும் போது வழிமறித்து வம்பு செய்வதாக சுட்டிக்காட்டி இருக்கக்கூடிய அவரது எக்ஸ் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் ஆஜராகாததால் எடப்பள்ளியில் உள்ள பாலாவின் வீட்டுக்கு வந்த போலீசார் அவரை கைது செய்து இருக்கிறார்கள்.

நடிகர் பாலா மீது எக்ஸ் மனைவி புகார்..

bala

இதை அடுத்து தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கும் பாலா தன்னை தன் மனைவி பெரிய சிக்கலில் சிக்க வைக்க திட்டம் போட்டு இருப்பதாக வீடியோவில் பேசி இருக்கிறார்.

எனினும் ரசிகர்கள் இந்த விஷயத்தை கேள்விப்பட்டு கோபத்தின் உச்சத்தில் இருக்கக்கூடிய அவர்கள் அடச்சீ நீ எல்லாம் ஒரு அப்பனா நடுத்தெருவுல மகளிடம் இப்படியா நடந்துக்குவ என்று சரமாரியாக கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

--- Advertisement ---

Check Also

vijay lokesh kanagaraj

மாஸ்டர்ல வர்ற ஜே.டி ப்ரஃபசர் நெஜமாவே இருக்கார்.. அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

சினிமாவைப் பொறுத்தவரை அதில் வரும் கதைகள் எல்லாமே எங்கோ ஒரு இடத்தில் இயக்குனருக்கு உருவான கதையாகதான் இருக்கும். வெளியில் இருந்து …