sridhar master october october

மகளால் நடுதெருவுக்கு வந்த ஸ்ரீதர் மாஸ்டர்.. இதுதான் காரணம்.. இவருக்கே இந்த நிலையா.?

சினிமாவில் நாம் நினைப்பது போல அதில் பணிபுரியும் எல்லா பிரபலங்களுக்குமே நல்ல சம்பளம் கிடைத்து விடுவது கிடையாது. மிக முக்கியமாக படத்தில் பணி புரியும் இயக்குனர், கதாநாயகன், கதாநாயகி போன்ற சிலருக்கு மட்டும் தான் அதிக சம்பளம் கிடைக்கும்.

அதற்குப் பிறகு இருக்கும் எல்லாருக்குமே மிகக் குறைவான சம்பளம்தான் கிடைக்கும் ஒருவேளை காமெடி நடிகர்கள் நல்ல வரவேற்பு பெற்று இருந்தால் அவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும்.

நடுதெருவுக்கு வந்த ஸ்ரீதர் மாஸ்டர்

மற்றபடி சின்ன சின்ன காமெடி நடிகர்களுக்கு எல்லாம் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் என்றுதான் சம்பளமே வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக இருந்து வருபவர் ஸ்ரீதர் மாஸ்டர்.

sridhar october october

பிரபுதேவா காலகட்டத்தில் இருந்தே இவருமே மாஸ்டராக இருந்து வருகிறார். நிறைய திரைப்படங்களில் டான்ஸ் மாஸ்டராக இவர் இருந்திருக்கிறார். முக்கியமாக விஜய் மாதிரியான பெரிய நடிகர்களுக்கு கூட இவர் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கிறார்.

இதுதான் காரணம்

இருந்துமே கூட எப்பொழுதுமே குறைவான சம்பளத்தை தான் பெற்றிருக்கிறார் இந்த நிலையில் தற்சமயம் தன்னுடைய மகளுக்காக தன்னுடைய அனைத்து சொத்துக்களையும் இழந்திருக்கிறார் ஸ்ரீதர் மாஸ்டர்.

இது குறித்து அவருடைய மகள் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நான் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் எனது தந்தை பணத்தைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் என்னை மருத்துவத்தில் சேர்த்து விட்டார்.

sridhar october october

அவரிடம் 25 லட்சம் ரூபாய்க்கு சொத்துக்கள் இருந்தன அவை அனைத்தையும் விற்று என்னை படிக்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அது கூட போதாமல் போகவே தங்கி இருந்த வீட்டையும் இப்பொழுது விற்றுவிட்டார்.

இப்பொழுது படங்களில் வேலை பார்த்து அந்த பணத்தையும் சேர்த்து எனக்கு கட்டி வருகிறார். அதையெல்லாம் நினைக்கும் பொழுதே எனக்கு பெருமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஸ்ரீதர் மாஸ்டரின் மகள்.

--- Advertisement ---

Check Also

vijay lokesh kanagaraj october october

மாஸ்டர்ல வர்ற ஜே.டி ப்ரஃபசர் நெஜமாவே இருக்கார்.. அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

சினிமாவைப் பொறுத்தவரை அதில் வரும் கதைகள் எல்லாமே எங்கோ ஒரு இடத்தில் இயக்குனருக்கு உருவான கதையாகதான் இருக்கும். வெளியில் இருந்து …