காய்த்து தொங்கும் ஆப்பிள் ஜம்பா.. – ரசிகர்களை எச்சில் ஊற வைத்த சீரியல் நடிகை பிரவீனா..!

சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரவீனா. பிரபல மலையாள நடிகையான இவர் 90களில் ஹீரோயினாக மலையாள சினிமாவை கலக்கிய பார் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

தற்போது, தமிழ் சீரியல்களில் அம்மா மற்றும் மாமியார் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 என்ற சீரியலில் ஸ்ட்ரிக்ட்டான மாமியாராக சிவகாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவருடைய உண்மையான பெயர் ரவினா நாயர் என்பதாகும். கேரள மாநிலத்தில் பிறந்த இவர், நடிகை மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட்டும் கூட. பதினெட்டு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் இவர் 1992 ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பிறகு தூர்தர்ஷன் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஸ்வப்த ஸ்வரங்கள் என்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பல பரிசுகளைப் பெற்றார். தற்போது, ஏராளமான சீரியல்களில் நடித்து வரும் இவர் ரசிகர்களின் அபிமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இணையத்தில் இளம் நடிகைகளுக்கு இணையாக துருதுருவென ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தன்னுடைய தோட்டத்தில் காய்த்து தொங்கும் ஆப்பிள் ஜாம்பாக்களுடன் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கும் கொஞ்சம் அனுப்புங்க நாவில் எச்சில் ஊறுது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …