சீனியர் காமெடி நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக புகார் கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் நடிகை பிரகதி 90களில் பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சீரியல்களிலும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். தமிழில் தெக்கத்தி பொண்ணு, வம்சம், அரண்மனைக்கிளி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார் இவர் சமீபகாலமாக உடற்பயிற்சி செய்வது யோகா செய்வது உள்ளிட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இளம் நடிகர்களுக்கு இணையான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியின் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தொல்லை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் சீனியர் காமெடி நடிகர் நடித்த ஒரு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது சூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது இந்த சம்பவம் என்ற தொடங்கிய பிரகதி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் வந்து பேசிய அந்த பிரபல சீனியர் காமெடி நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார் இதனால் அதிர்ந்து போன நான் அவரிடம் எதுவும் பேசாமல் மாலையில் படப்பிடிப்பு முடியும் தருவாயில் அவர் கேரவேனுக்குள் அழைத்து பேசினேன்.
நான் உங்களிடம் தவறாக நடக்க ஏதாவது சிக்கல் கொடுத்தேனா..? என்று கேட்டேன் அல்லது என்னுடைய பாடி லாங்குவேஜ் உங்களுக்கு அப்படி தோன்றியதா..? என கேட்டேன். இந்த இரண்டு கேள்விக்கும் அவர் இல்லை என பதில் கூறினார்.
நீங்கள் செய்தது மிகவும் தவறான காரியம் இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவரிடம் கூறினேன். நான் நினைத்திருந்தால் அந்த இடத்திலேயே உங்களை அசிங்கப்படுத்தி இருக்க முடியும்.
ஆனால் உங்களின் இமேஜ் இத்தனை ஆண்டுகள் நீங்கள் உழைத்த உழைப்பு இதனை கருத்தில் கொண்டு படப்பிடிப்பு முடியும் வரை காத்திருந்து உங்களிடம் மட்டும் கூறுகிறேன்.
இனிமேல் இதுபோன்ற என்னிடம் நடந்து கொள்ளாதீர்கள் என்று அவரை எச்சரித்து அனுப்பியதாக பிரகதி கூறியுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் யார் அந்த சீனியர் நடிகர் என்று பெரிய விவாதத்தை நடத்தி வருகின்றனர்.