கிரேட் கரிகாலன் மேஜிக் ஷோ என்ற நடிகர் வடிவேலுவின் காமெடி கதாபாத்திரத்திற்கு ஏற்ப தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் நிலை உள்ளது.
எந்த இயக்குனர் வெற்றிப்படம் கொடுத்தாலும் அந்த இயக்குனரை பாராட்டி விட்டு அப்படியே தலையை ஸ்மூத்தாக டர்ன் செய்து இயக்குனர் நெல்சனை பொழந்து கட்டிய பிறகுதான் தங்களுடைய நாள் திருப்தியாக கடந்ததாக உணருகிறார்கள் நெட்டிசன்கள்.
அந்த அளவிற்கு நடிகர் இயக்குனர்களின் பெயர் டேமேஜ் ஆகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பீஸ்ட் படத்தின் பிரம்மாண்ட தோல்விதான்.
தமிழ் சினிமாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அடித்து துவைக்கப்பட்ட ஒரு கதையை எடுத்துக்கொண்டு வந்து முன்னணி நடிகராக. சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு இருக்கும் நடிகர் விஜய்யை பங்கம் செய்துவிட்டார் என்று இயக்குனர் நெல்சன் மீது தீராத கடுப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில், நிஜ சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை வைத்து அடுத்த படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் நெல்சன் என்றால் ரசிகர்களுடைய பதைபதைப்பு எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இதே பதைபதைப்பு இயக்குனர் நெல்சன் இருக்கும், இருக்கிறது என்று அவருடைய நண்பர்கள் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் காமெடி நடிகரும் இயக்குனர் தனக்கு நெருங்கிய நண்பருமான ரெடின் கிங்ன்ஸிலே தலைவர் 169 படத்திற்காக இயக்குனர் நெல்சன் இரவில் கூட தூங்காமல் கதையை மெருகேற்றி வருவதாகவும் கண்டிப்பாக இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதை இதுதான் என்று ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறைச்சாலை மற்றும் சிறைக்கைதிகளை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதாம் கைதிகளோடு கைதியாக இருந்து முக்கியமான வழக்கு ஒன்றின் தீர்வை தேடுவது தான் இந்த படத்தின் கதை என கூறபடுகிறது. எனவே இந்த படத்திற்கு பொருத்தமாக ஜெய்லர் என்ற தலைப்பை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.