கிட்டத்தட்ட நாற்பது வயதாகும் நடிகை நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணத்துக்கு முன்பே பலரும் நடிகை நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வார் என்று பேசி வந்தனர்.
அதிலும் முக்கியமாக கடலூரைச் சேர்ந்த அறிவன்பன் என்ற மருத்துவர் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் நயன்தாராவின் திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ளும் விஷயம் சம்பந்தமான சில கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.
அதில் நடிகர் நடிகை நயன்தாராவின் நடிப்பு திறமையை பாராட்டுகிறேன். ஆனால், தற்போது 40 வயதாகும் நடிகை நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்வது என்பது கடினமான விஷயம். இந்த வயதில் குழந்தை பெற்றுக் கொண்டு குழந்தை குடும்பம் என அனைத்தையும் பார்த்துக் கொள்வது கடினமான விஷயம்.
எனவே நடிகை நயன்தாரா வாடகைத்தாய் மூலம் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். அப்படி பெற்றுக் கொண்டால் தான் அவருக்கு நல்லது என கூறியிருந்தார்.
இதனை பார்த்த பிரபல பாடகி சின்மயி ஒரு மருத்துவராக இருந்து கொண்டு ஒரு நடிகையை பற்றி இவ்வளவு கேவலமான கருத்தை எப்படி ஒருவரால் பதிவு செய்ய முடியும் என்று கடுமையாக விளக்கியிருந்தார்.
இந்த பதிவு தற்போது வெளியாகி உள்ள நிலையில் நடிகை நயன்தாராவை இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா..? முடியாதா..? என்ற விவாதமே ஆரம்பமாகியுள்ளது.
ஏற்கனவே தன்னுடைய தொப்பையை குறைப்பதற்காக நடிகை நயன்தாரா சிகிச்சை எடுத்துக்கொண்ட பொழுது அவருடைய கர்ப்பப்பை பாதிக்கப்பட்டதாக சில தகவல்கள் இணையத்தில் வெளியாகின.
இந்நிலையில் இதற்காக தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் 37 வயதாகும் இந்த சிகிச்சையை கைகொடுக்கவில்லை எனும் பட்சத்தில் நிச்சயமாக அவர் வாடகைத் தாய் மூலம் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற தகவலும் வைரலாகி வருகிறது.
எது எப்படியோ ஒரு நயன்தாரா ஒரு நடிகை அவர் நடிக்கும் படங்களை பற்றிய விமர்சனங்களை வைக்கலாம். திட்டலாம், தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை கூட கூறலாம்.
ஆனால் அந்த நடிகையின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை குறித்து இப்படியான கருத்துக்களை பொதுவெளியில் வைப்பது முறையானது அல்ல இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
அவர், அவரே குழந்தை பெற்றுக் கொள்கிறார்.. அல்லது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்.. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் அதில் விமர்சனம் செய்யவோ கருத்து கூறவோ யாருக்கும் உரிமை கிடையாது என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். அதுதான் உண்மையும்கூட.
சமீப காலமாக நடிகர் நடிகைகளை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது இதற்கு அப்படி விமர்சிக்கும் நபர்கள் அதற்கென தனியாக விளக்கம் வேறு கொடுக்கின்றனர் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்.