கர்ப்பமா இருக்கும் போதே கேலி பண்ணாங்க.. இப்போ குழந்தை பிறந்த அப்புறம்… சின்மயி கூறும் பகீர் தகவல்..!

பிரபல பாடகி சின்மயிக்கு தற்பொழுது இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ள நிலையில் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சைக்கும் சலசலப்பும் பஞ்சமில்லாத பாடகி சின்மயி தன்னுடைய இந்த மகிழ்ச்சியான நேரத்திலும் சில கடினமான சூழ்நிலைகளில் உள்ளாகி உள்ளார் என்பது கசப்பான உண்மை.

காரணம் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று விட்டீர்கள் என்று உண்மைக்கு புறம்பான பல மீம்கள், கருத்துக்கள் இணையத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

இதனால் கடுப்பான பாடகி சின்மயி தன்னுடைய விளக்கத்தை கொடுத்து அப்படி பேசியவர்களின் வாயை தார் போட்டு அடைத்துள்ளார். மிகவும் இளைமையாக இருக்கும் பொழுதே திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றது இன்னும் குழந்தை இல்லை எப்போதுதான் குழந்தை பெற்ற என்று பலரும் என்னை கேலி செய்து வந்தனர்.

அது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை கொடுத்தது. கடந்த வாரம் ட்விட்டர் ஸ்பேஸ்சில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாடகி சின்மயி பேசிக்கொண்டிருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது இப்படி பேசினாரா..? என சில நண்பர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினர். இதனைப் பார்த்த சின்மயி ஆமாம் நிறை மாத கர்ப்பமாக இருக்கும் போது தான் பேசினேன்.

இதனால் கடைசியில் எனக்கு மூச்சு பிரச்சனை கொஞ்சம் வந்துவிட்டது என்று பதிலளித்திருந்தார். சின்மயின் இந்த போஸ்ட்க்கு கீழே ட்ரோல் செய்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

உங்கள் குழந்தைகளுக்கான நேரத்தை செலவழியுங்கள் உன்னுடைய வாழ்க்கை எங்கிருந்து புதிய கோணத்தை நோக்கி நகர உள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தாயான உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் என்று ரசிகர்கள் சின்மயிக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …