சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமான நடிகை அனசுயா கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாகவே தன்னுடைய வாழ்க்கையைத் தொடர்ந்தார்.
ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே தொடர்ந்து சினிமாவில் பயணிக்க கவர்ச்சி ரூட்டுக்கு மாறினார். இதன் மூலம் முன்னணி ஹீரோக்களுக்கு ஹீரோக்களின் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அதன்படி நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் திரைப்படத்தில் அவருக்கு அத்தை கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்த கதாபாத்திரம் இவரது நடிப்பை ரசிகர்களுக்கு எடுத்துக் காட்டியது. மட்டுமல்லாமல் இவருக்கு விருதையும் பெற்றுக்கொடுத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.
முதல் படத்திலேயே இவருடைய மிரட்டலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது புஷ்பா இரண்டாம் பாகத்தில் இவருடைய பங்களிப்பு அதிகமாக இருக்கும் என விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்தாலும், தன்னை வளர்த்தெடுத்த சின்னத்திரையை மறந்து விடாமல் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.
அப்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வரும் போது படு கவர்ச்சியான உடைகளை தேர்ந்தெடுக்கும் இவர் தற்பொழுது கிளாமரான உடை அணிந்து கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனை, பார்த்த ரசிகர்கள் வயசு வெறும் நம்பர் தான் கவர்ச்சி உடையில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்குறீங்க என்று கமெண்ட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!