இதனால் தான் ரகுவரனை விவாகரத்து செய்தேன்..! – போட்டு உடைத்த நடிகை ரோகிணி..!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகை ரோகிணி சமீபத்தில் தனது கணவருடன் நானே நினைவுகளை பகிர்ந்து சினிமாவில் வில்லன் நடிகராக நடித்து தற்போது மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு மறையாத ஒரு நடிகர் ரகுவரன்.

கடந்த 1996ஆம் ஆண்டு நடிகை ரோகிணி மற்றும் ரகுவரன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் மட்டுமே நிலைத்தது 2004ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

விவாகரத்து பெற்ற நான்கு ஆண்டுகளில் நடிகர் ரகுவரன் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது காதல் மனைவி ரோகினி அளித்த பேட்டி ஒன்றை தற்பொழுது ரீவைண்ட் செய்து பார்க்கலாமா..?

நடிகை ரோகினி மலையாளத்தில் தன்னுடைய முதல் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் ரகுவரனின் சந்தித்துள்ளார். அப்போது இருவருக்கும் காதல் பற்றிக்கொண்டது. அப்பொழுது நடிகை ரோகினி வெறும் 16 வயது தான். ஆனால் ரகுவரனுக்கு 25 வயது.

13 ஆண்டுகள் காதலித்து வந்த இருவரும் கடந்த 1996ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ரகுவரனை நடிகை ரோகிணி சந்திக்கும்பொழுது சிறுமியாக இருந்துள்ளார். ஆனால் ரகுவரன் பக்குவம் பெற்றவராக இருந்தார்.

மேலும், நடிகை ரோஹினி இது பற்றி கூறுகையில், ரகுவரன் அதிகம் பேச மாட்டார். அவர் எப்போதுமே நிழல்கள் ரவி உடன் தான் அதிகமாக பேசிக்கொண்டிருப்பார் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது குறித்து எதுவுமே எனக்கு தெரியாது. நல்ல நண்பராக இருந்தார்.

அவருடைய வேலையை படப்பிடிப்பு தளத்தில் பார்க்கும் போதுதான் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பது தெரிந்தது. பொதுவெளியில் அதிகம் பேசாதவர் வீட்டில் பேசிக் கொண்டே தான் இருப்பார்.

கல்யாணம் ஆன புதிதில் வீட்டில் கொடூரமாக பேசிக்கொண்டிருந்தார். எனக்கு பயமாக இருந்தது. அப்பொழுது ரகுவரனின் அம்மா என்னிடம் இப்போது எந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிச்சுட்டு இருக்கான் என கேளு என்று கேட்டார்.

அதன் பிறகு தான் தெரிந்தது அவர் படத்தில் நடிக்கும் கதாபாத்திரமாகவே நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அவர் வீட்டில் நடந்து கொள்ளும் விஷயங்கள் அவர் அந்த சமயத்தில் நடித்துக் கொண்டிருக்க கூடிய கேரக்டர் போலவே இருக்கும்.

ஒரு இடத்தில் உட்கார மாட்டார் அங்குமிங்கும் அலைந்து கொண்டு பேசிக் கொண்டே இருப்பார். கணவன் மனைவி என்றால் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பது சகஜம். ஆனால் எங்களுக்குள் இருந்த பிரச்சனை எங்களுடைய மகனை பாதிக்கும் விதமாக இருந்தது அதனால் தான் ரகுவரனை பிரிந்தேன் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …