திவ்யதர்ஷினி-க்கு இரண்டாவது திருமணம்..? – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா.. தூக்கி வாரிப்போட்ரும்..!

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்தும் மாப்பிள்ளை யார் என்பது குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த நிலையை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் பெருவாரியான ரசிகர்களை பெற்றவர் நடிகை திவ்யதர்ஷினி. சீரியல் நடிகையான இவர் ஒரு கட்டத்தில் தன்னுடைய முழுநேரப் பணியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக மாற்றிக்கொண்டார்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பயணித்து வரும் இவர் தன்னுடைய நண்பரை திருமணம் செய்து சில மாதங்கள் மட்டுமே அவருடன் சேர்ந்து வாழ்ந்தார்.

அதன்பிறகு இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்களுடைய திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ள திவ்யதர்ஷினி தற்பொழுது பாரீஸ் நகரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கே இருக்கும் பலதரப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் சென்ற திவ்யதர்ஷினி அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் பாரிசில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் பீட்சா சாப்பிட்டுள்ளார் அம்மணி. இந்த பீட்சாவை வாங்கி சாப்பிட்டு அதன் சுவையில் மயங்கிய திவ்யதர்ஷினி அந்த பீட்சாவை சமைத்தவரை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

மேலும் அவரை சந்தித்து அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூற வேண்டுமென்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் அவரை கலாய்த்து மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …