தன்னுடைய முதல் செய்தி வாசிப்பிலேயே அன்றைய நாளிதழ்களின் தலைப்புச் செய்தியில் இடம் பிடித்தவர் செய்தி வாசிப்பாளர் ரத்னா. கடந்த 1989ஆம் ஆண்டு செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கிய இவர் அப்போது முதலே தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக திகழ்ந்து வருகின்றார்.
உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் அடையாளமாக இருக்கும் தமிழக செய்தித் துறையில் கோலோச்சி வருகிறார் செய்தி வாசிப்பாளர் ரத்னா.
செய்தி வாசிப்பு மற்றும் இல்லாமல் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சிலகாலம் பணி புரிந்துள்ளார். சமீபத்திய ஒரு பேட்டியில் பேசிய அவர், அந்த காலத்தில் எல்லோர் வீட்டிலும் தொலைக்காட்சிப்பெட்டி இருப்பாது.
அதுவும் தூர்தர்ஷன் சேனல் மட்டுமே இருந்த காலகட்டம் அது. ஞாயிற்று கிழமை சினிமா.. வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் என பார்ப்பதற்கு எங்கள் வீட்டுக்கு நிறைய பேர் வருவார்கள்.
ஆனால், நான் செய்திபார்க்க மட்டுமே பார்ப்பேன். ஏனென்றால் அப்போதுதான் கூட்டம் இருக்காது. செய்தி ஒளிபரப்பினார்கள் என்றாலே எல்லோரும் தெறித்து ஓடிவிடுவார்கள். அதனால், நான் மட்டும் எந்த தொந்தரவும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.
செய்தி பார்ப்பதால் நாட்டுநடப்பு மீது எனக்கு ஆர்வம் என்று நினைத்து விடாதீர்கள். செய்தி வாசிப்பவர்கள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது எப்படி தொடர்ச்சியாக எந்த ஒரு இடையூறும் இன்றி பேசுகிறார்கள் என்று வியப்பாக பார்த்துக்கொண்டிருபேன்.
அவர்களின் பெயர் கூட எனக்கு தெரியாது. ஆனால், அவர்களுடைய கணீரென்ற குரலும் வார்த்தைகள் உச்சரிப்பும் எனக்கு செய்தி வாசிப்பின் மீதான ஆர்வத்தை தூண்டியது. இதுவே இனி செய்தி வாசிப்பாளராக ஆக்குவதற்கு உந்து கோலாக இருந்தது என்று கூறினார்.
சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இருந்த ரத்னா இது கோவாவின் பிரசித்தி பெற்ற ஒரு கடற்கரையில் எடுக்கப்பட்டது.
நான் மட்டும்தான் அங்கே முழுதாக ஆடை அணிந்து கொண்டு இருந்தேன். என்னை தவிர அங்கிருந்து எல்லோரும் வெளிநாட்டவர்கள் என்று நகைப்புடன் தன்னுடைய இளம் வயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ரத்னா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.