என் வாழ்க்கையே வீணா போச்சு.. – பிரபல நடிகை சங்கீதா கதறல்.! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகை சங்கீதா தன்னுடைய பெற்ற தாய் மீது கூறியுள்ள புகார் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் 90களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.

அழகான முகம் வாட்டசாட்டமான தோற்றம் என கவர்ச்சி குதிரையாக வலம் வந்த நடிகை சங்கீதாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இயக்குனர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

தற்போது குணச்சித்திர வேடங்களில் சங்கீதா தொடர்ந்து சின்னத்திரையில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கல்லா கட்டி வருகிறார். இடையில் பிரபல பாடகர் கிருஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சங்கீதா அளித்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்றுதான் கூறவேண்டும். அவர் கூறியதாவது, நான் 13 வயதில் இருந்தே சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் சம்பாதித்த அனைத்து பணத்தையும் என்னுடைய அம்மா மற்றும் சகோதரர்களிடம் மட்டுமே கொடுத்துள்ளேன். ஆனால், அவர்கள் அப்போதெல்லாம் அந்த பணத்தை சேர்த்து வைக்காமல் ஊதாரித்தனமாக செலவு செய்துவிட்டு விட்டனர்.

தற்போது திருமணம் ஆன பின்பும் நான் தான் அவங்களுக்கு சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இவர்களால் என்னுடைய வாழ்க்கையே வீணாகிவிட்டது.

படங்களில் நடித்து பல லட்சங்களை சம்பாதித்த என்னிடம் சேமிப்பு என்று எதுவுமே கிடையாது இதற்கு முக்கிய காரணமே என்னுடைய அம்மாவும் சகோதரர்களும் தான். கல்யாணத்துக்கு திருமணத்திற்கு முன்பு நான் நிறைய படங்களில் சம்பாதித்துக் கொடுத்து இருக்கின்றேன்.

ஆனால் தற்போதும் கல்யாணமான பிறகும் எனக்கு எங்களுக்கு சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இதனால் என்னுடைய திருமண வாழ்க்கையை நிம்மதியாக என்னால் களிக்க முடியவில்லை.

இது ஒரு பக்கமிருக்க பெற்ற தாயை கைவிட்ட சங்கீதா என்று என் மீது பட்டம் கட்டுகிறார்கள். அது உண்மை அல்ல பல லட்சங்களை நான் அவர்களுக்காக கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை அவர்கள் ஒரு பைசா கூட சேர்த்து வைத்து கிடையாது. அனைத்தையும் செலவு செய்துவிட்டு தற்போது மீண்டும் மீண்டும் என்னிடம் பணம் கேட்பது எனக்கு பெரிய தொந்தரவாக இருக்கிறது என்று புலம்பியுள்ளார் நடிகை சங்கீதா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …