பிரபல இளம் நடிகை பிரிகிடா சாகா சமீபத்தில் வெளியான இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து இருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள மோசமான வசனங்கள் குறித்து இந்த படத்தில் நடித்த நடிகை பிரிகிடாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரிகிடா கூறிய பதில் ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதாவது ஒரு சேரி செட்டப்பில் படம் நகரும் பொழுது அங்கே இருக்கும் மக்களை போல தான் பேச முடியும். சேரி மக்கள் எப்படிப் பேசுவார்களோ அதுபோலதான் படத்திலும் பேசினோம். படம் எடுக்கிறேன் என்கிற காரணத்திற்காக அவர்கள் பேசும் முறையை மாற்ற முடியாது என்று கூறியிருந்தார்.
இவர் சேரி என்று குறிப்பிட்ட வார்த்தை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால், பலரும் ஜாதி வெறி பிடித்த நடிகை பிரிகிடா என இணையத்தில் விளாசி வந்தனர்.
இதனை அடுத்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மன்னிப்பு கேட்டார் பிரிகிடா சாகா. அதாவது நான் குறிப்பிட்ட சாதியை அல்லது குறிப்பிட்ட இனத்தை விமர்சனம் செய்ய வேண்டிய நோக்கில் நான் பதில் கூறவில்லை.
என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கின்றது. என்னுடைய பேச்சை யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள் நான் பேசியதை பெரிது படுத்த வேண்டாம் என்று மன்னிப்பு கேட்டிருந்தார் பிரிகிடா.
இதனால் இந்த விவகாரம் அடங்கியது. தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகையாக முயற்சியில் ஈடுபட்டு வரும் இவர் அடிக்கடி நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களிலும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவரது புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.