இதனால் தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றேன் – ரகசியம் உடைத்த பிரியங்கா சோப்ரா..!

கடந்த 1982ஆம் ஆண்டு பீகார் மாநிலம் ஜபல்பூரில் பிறந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. கடந்த 2002ஆம் ஆண்டு தமிழன் என்ற திரைப்படத்தில் பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா சோப்ரா.

அதன்பிறகு தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு ஹிந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார். தற்போது ஹாலிவுட்டிலும் குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைவான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மட்டுமில்லாமல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இந்த விவகாரம் குறித்து கண் காது மூக்கு வாய் என அனைத்தையும் உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்து பல கட்டு கதைகளை உலவ விட்டன பாலிவுட் ஊடகங்கள்.

ஆனால் அவை அனைத்தும் பொய் என கூறியுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. என்னாலோ அல்லது எனது கணவராலோ குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்ற தகவல் பொய்யானது.

எங்களுக்கு இருக்க கூடிய தொழில் நிமித்தமான பணிகளுக்கு மத்தியில் குழந்தை பெற்றுக் கொண்டு அதற்காக நேரம் ஒதுக்குவது மிகவும் கடினமான ஒரு விஷயம் என்று நாங்கள் உணர்ந்தோம். எனவே தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டோம்.

உயிரியல் முறையில் நான் என் குழந்தைக்கு தாய் இல்லை என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. இது என்னுடைய குழந்தை தான். வளர்ந்தது மட்டும் தான் வேறு ஒரு தாயின் வயிற்றில் என்று சில இரகசியமான விஷயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா. இதனால் இது குறித்த வதந்திகள் அடங்கி உள்ளன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …