தமிழ் சினிமாவின் காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு பிறகு காதல் மன்னன் யார் என்றால் அது நடிகர் அஜித்குமார் தான். அந்த வகையில், நடிகர் அஜீத் குமாரை மாளவிகா மாளவிகா மனம் பறித்தாய் மாளவிகா என்று தன் பின்னால் சுத்தலில் விட்டவர் நடிகை மாளவிகா.
இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா மேனன் என்பதாகும். இவர் நடித்திருந்த முதல் திரைப்படமான உன்னைத்தேடி படத்தில் இவர் நடித்திருந்தார் கதாபாத்திரத்தின் பெயர் மாளவிகா. இந்த படம் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது.
அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடித்த நடிகை ஸ்வேதா மேனனை பலரும் மாளவிகா என்று அடையாளம் கொண்டனர். இதனால் தன்னுடைய பெயரை மாளவிகா என்று மாற்றிக் கொண்டார் நடிகை ஸ்வேதா மேனன்.
தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாகத் தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து வந்தார்.
ஒரு கட்டத்தில் அந்த வாய்ப்பும் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அம்மணி. தற்போது மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் நடிகை மாளவிகா உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகின்றார்.
அதற்காக உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி ஆகியவற்றை பின்பற்றி வருகின்ற நிலையில் உடற்பயிற்சி செய்து முடித்த கையோடு வியர்வையில் நனைந்த முண்டா பனியனோடு டாப் ஆங்கிளில் செல்பீ ஒன்றை எடுத்துக்கொண்டு அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.