பிரபல இளம் நடிகை பிரிகிடா சாகா சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் சில காட்சிகளில் ஆடையின்றி நடித்து இருந்ததாக தகவல்கள் வெளியாகி இந்த படத்திற்கு பெரிய விளம்பரத்தை தேடிக் கொடுத்தது.
அதேபோல சில நிமிட காட்சிகளில் ஆடையின்றி நடித்திருந்தார் நடிகை பிரிகிடா சாகா. இந்நிலையில் நிர்வாண காட்சியில் நான் நடித்தபோது குட்டியான எலாஸ்டிக் போன்ற ஒரு உடையை அணிந்து இருந்தேன் உடையை மேலே இழுத்து விட்டால் அது இருப்பதே தெரியாது.
இது ஒரு கேமரா ட்ரிக் தானே தவிர நான் நிர்வாணமாக நடிக்க வில்லை. காட்சியில் பார்ப்பதற்கு நான் நிர்வாணமாக அமர்ந்து இருப்பது போலத் தோன்றும் என்று கூறியுள்ளார் பிரிகிடா சாகா.
படம் வெளியாகி கிட்டத்தட்ட படத்தின் ஓட்டம் முடிந்துவிட்ட நிலையில் நடிகை பிரிகிடா சாகா இப்படி கூறியுள்ளார். ஆனால், படம் வெளியாகும் முன்பு நான் வீட்டில் சம்மதம் வாங்கி நடித்தேன். வீட்டில் சொல்வதற்கு மிகவும் கூச்சமாக இருந்தது. நடிகர் பார்த்திபனும் வந்து எங்கள் குடும்பத்தாரிடம் பேசி இப்படியான காட்சியில் நடிக்க எங்கள் குடும்பத்தாரிடம் சம்மதம் வாங்கினார் என்று ஏக வசனம் பேசி இருந்தார்.
ஆனால் படம் ரிலீசாகி அதனுடைய ஓட்டம் முடிந்த பிறகு நான் நிர்வாணமாக நடிக்க வில்லை உடை அணிந்து கொண்டுதான் இருந்தேன் கேமரா ட்ரிக் மூலம் நிர்வாணமாக இருப்பது போல காட்டி உள்ளார்கள் என்று பேசியுள்ளார்.
மேலும் படத்தில் மோசமான வசனங்கள் இடம் பெற்றிருந்தது பிடித்து சேரியில் இருக்கும் மக்கள் அப்படித்தான் பேசுவார்கள். அவர்கள் பேசுவதை போல தான் நாங்கள் பதிவு செய்துள்ளோம். நீங்கள் வேண்டுமானால் சேரியில் போய் பாருங்கள் என்று பேசியிருந்தார்.
பிரிகிடா சாகா-வின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்னுடைய கருத்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருந்தார் பிரிகிடா சாதா என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கவர்ச்சி உடையில் தன்னுடைய இடுப்பழகு தெரிய ஆட்டம் போட்டுள்ள இவரது புகைபடங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், அக்மார்க் நாட்டுக்கட்ட.. அல்வா துண்டு இடுப்பு.. என்று வர்ணித்து வருகின்றனர்.