நடிகை ராஷி கண்ணா வெப்சீரிஸ் ஒன்றில் ஆடையின்றி நடிக்க உள்ள விஷயம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ராசி கண்ணா தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
நடிப்பைத் தவிர ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள நடிகை ராசி கண்ணா அடிக்கடி ஆன்மீகம் சார்ந்த சுற்றுலா செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இப்படி இருக்கும் ராசிகண்ணாவிடம் ஆன்மீகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய அவர் ஆன்மீகம் என்பது என் பார்வையில் நாம் வாழும் இந்த வாழ்க்கையில் கிடைத்த அனைத்தையும் ஒரே மாதிரி ஏற்றுக்கொள்வது என்று சொல்வேன். வெற்றி தோல்வி சந்தோஷம் சோகம் என எதுவாக இருந்தாலும் அதனை நிலையான மனதுடன் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
நம்முடைய கர்மாவை பொறுத்து தான் நம்முடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கின்றது. எனவே எல்லா சூழ்நிலையிலும் நான் நானாக சாதாரணமாக இருப்பேன் வெற்றி பெற்றாலும் கொண்டாடுவது கிடையாது. தோல்வி அடைந்து விட்டாலும் சோர்வடைவது கிடையாது.
இந்த இரண்டையும் சமமாக ஏற்று கொண்டு தன்னுடைய வாழ்க்கையில் பயணித்து வருகிறேன். இதற்கு முக்கிய காரணம் ஆன்மீகம்தான் என்று கூறியுள்ளார். ராஷ்மிகா ஒரு இளம் நடிகை ஆன்மீகம் குறித்து இவ்வளவு அழகான புரிதல் கொண்டுள்ளார் என்று ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.
இந்நிலையில், வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட்டாகி உள்ள நடிகர் சில நிமிட காட்சிகளில் உடம்பில் ஆடை இன்றி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ள இந்த வெப்சீரிஸ் இணைய தளத்தை இணையத்தில் நடக்கக் கூடிய பெண்கள் மீதான அத்துமீறல் குறித்து விஷயங்களை மையக் கருவாகக் கொண்டு உருவாக உள்ளது எனக் கூறப்படுகிறது.
ஹீரோயின் சென்ட்ரிக் வெப்சீரிஸான இதில் நடிகை ராசி கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், சில காட்சிகளில் ஆடையின்றி நடிக்கவுள்ளதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது