நடிகை அனு இம்மானுவேல் புடவை சகிதமாக தங்கம் போல் மின்னும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுடைய அழகை பார்க்கும் பொழுது பெண்களுக்கே மோகம் வரும் போல இருக்கே.. தேனில் ஊறவைத்த பலாச்சுளை.. பார்த்தாலேதூக்குதுங்க.. என்று ஏடா கூடமான கருத்துக்களை கொண்டு அவளது அழகை வர்ணித்து வருகின்றனர்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை அனு இம்மானுவேல் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நன்கு அறியப்பட்ட நடிகையாக வலம் வருகிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர். அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அஞ்ஞாதவாசி திரைப் படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படம்தான் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. இந்த படத்தில் மாங்கனி என்ற கதாபாத்திரத்தில் சுடிதார் மற்றும் புடவை சகிதமாக குடும்ப பாங்காக நடித்து ரசிகர்கள் மத்தியில் காந்தக் கண்ணழகி என்ற புனைப் பெயருடன் தன்னுடைய பெயரை பதிவு செய்தவர் நடிகை அனு இம்மானுவேல்.
தற்போது கைவசம் பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சியில் மாறியுள்ள இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் சூட்டைக் கிளப்பி விட்டு வருகின்றது. மட்டுமல்லாமல் இளசுகளின் மனதை கொள்ளையடித்து வருகின்றது.
அந்த வகையில் தற்போது புடவை சகிதமாக தன் மேனியின் மீது பழுப்பு நிறத்திலான ஒளியை படரவிட்டு செம்பில் செய்த சிலை போல அமர்ந்திருக்கும் அந்த மாலையை அணிந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.