தன்னுடைய நீண்ட முயற்சிக்குப் பிறகு சினிமாவில் ஹீரோயின் ஆகியிருக்கிறார் நடிகை ஷிவானி நாராயணன். சின்னத்திரையில் பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
கமல்ஹாசனின் விருப்பமான போட்டியாளர்களாக இருந்த ஷிவானி நாராயணன் விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகள் ஒருவராக நடித்திருந்தார். தற்போது ஹீரோயினாகவும் அறிமுகமாக உள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு களமிறங்கி சிக்சர் அடித்து வரும் நடிகைகள் பட்டியலில் நடிகைஷிவானி நாராயணன் இணைந்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 30 லட்சம் பாலோவர்களை கொண்ட இவர் அடிக்கடி தன்னுடைய போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வசியப்படுத்தி வருகிறார்.
சமீபகாலமாக சீரியலில் இருந்து சினிமாவிற்கு வரும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. அந்த வகையில் ஷிவானி நாராயணன் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ளார்.
விக்ரம் படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார் என்றாலும் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நல்ல பதிந்தது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்