ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த பிறகு சீரியல் பக்கம் கரையொதுங்கும் நடிகைகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்பொழுது சீரியலில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி அதன் மூலம் சினிமாவில் நுழையும் நடிகைகளை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் பல நடிகைகள் செய்தி வாசிப்பாளராக இருந்து.. தொலைக்காட்சி சீரியல் நடிகையாக இருந்து.. தற்பொழுது சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கின்றார்கள். அந்த பட்டியலில் மிகவும் முக்கியமானவர் நடிகை வாணி போஜன்.
சின்னத்திரையில் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து வந்த இவர் சின்னத்திரை நயன்தாரா என்று பலராலும் அழைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் வாணி போஜன் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை வாணி போஜன் சமீபகாலமாக கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில், விக்ரம் நடிப்பில் உருவான மகான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் வாணி போஜன். ஆனால் படத்தின் நீளம் கருதி வாணிபூஜன் போர்ஷன் வெட்டி வீசப்பட்டது.
இது குறித்து பேசிய வாணிபோஜன் படத்தின் நீளம் குறித்து படக்குழுவினர் முடிவு எடுத்திருக்கிறது அதற்காக நான் வருத்தப்படவில்லை படம் நன்றாக வந்தால் போதும் அதுதான் என்னுடைய விருப்பம் என்று கூறியிருந்தார் வாணி போஜன்.
ஆனால், இந்த விவகாரத்துக்கு பிறகு இந்த காட்சி நிஜமாகவே படத்திற்கு தேவை தானா அல்லது தேவையில்லையா என்று நன்கு அலசி ஆராய்ந்த பிறகு படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் வாணிபோஜன் தொடர்ந்து வெப்சீரிஸ் கவனம் செலுத்திவருகிறார் வாணிபோஜன்.
பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயார் என்ற முடிவில் இருக்கிறாராம் அம்மணி. மேலும், இனிமேல் தான பார்க்க போறீங்க என்று வாணிபோஜனோட ஆட்டத்த என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.