தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா தமிழில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தார் நடிகை சினேகாவின் சிரிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் மயக்கியது என்றுதான் கூறவேண்டும்.
இவருக்கு புன்னகை அரசி என்ற பட்டப் பெயரை கொடுத்து அழகு பார்த்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள். பொதுவாக சினிமா உலகில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள குடும்ப பாங்காக நடித்து வந்த நடிகைகள் கூட ஒரு கட்டத்தில் கிளாமர் ரூட்டுக்கு மாறி விடுவார்கள்.
அந்த வகையில் சினிமாவில் அறிமுகமாகும் பொழுது அடக்க ஒடுக்கமான குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை சினேகா ஒரு கட்டத்தில் கவர்ச்சி புயலாக தமிழ் சினிமா ரசிகர்களை சுழன்று அடித்தார்.
இன்னும் ஒருபடி மேலே சென்று ஆளே மாறி சில படங்களில் விலைமாதுவாக நடிக்கும் அளவிற்கு சினிமா மீதான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார். ஒரு சில படங்களில் மட்டுமே கவர்ச்சியாக வேடங்களை ஏற்று நடித்து இருந்தாலும் நடிகை சினேகாவின் மார்க்கெட்டுக்கு இந்த படங்களில் துணை கொடுத்தன.
தொடர்ந்து அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பொழுது அந்த படத்தின் ஹீரோ பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் கோவா படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.