பிரபல இளம் நடிகை அஞ்சலி சமீபத்தில் நடிகை சமந்தாவுக்கு கொடுக்கும் விதமாக கவர்ச்சி ஆட்டம் போட்டு ரசிகர்களை அதிர வைத்தார். நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருந்த புஷ்பா திரைப்படத்தில் நடிகை சமந்தா ஊம்.. சொல்றியா மாமா என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார்.
அந்த பாடலில் நடிகை சமந்தாவின் அசைவுகளை ஒன்று விடாமல் நிறுத்தி நிறுத்திப் பார்த்து ரசித்தனர் ரசிகர்கள். அந்தப் பாடலின் வெற்றியை தொடர்ந்து பல முன்னணி இளம் நடிகைகள் ஒரு பாடலுக்கு ஆட்டம் போடும் ஐட்டம் டான்சராக நடிக்க தயாராகி உள்ளனர்.
அந்த வகையில் நடிகை அஞ்சலியும் ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். அந்த பாடலின் நடிகை சமந்தாவை ஓரம் கட்டும் அளவிற்கு படு சூடான கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி.
நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் நல்ல நடிகை என்ற பெயரை தமிழ் சினிமா வட்டாரத்தில் தனதாக்கினார். தொடர்ந்து அங்காடித்தெரு தூங்காநகரம் மங்காத்தா எங்கேயும் கலகலப்பு என அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்தார் அம்மணி.
எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த போது நடிகர் ஜெய்யுடன் காதல் வயப்பட்டு அவருடன் திருமணமே செய்யாமல் சில காலம் வாழ்ந்து ஒரு கட்டத்தில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தற்போது மீண்டும் சினிமாவில் மின்னல் வேகத்தில் பயணித்து கொண்டிருக்கிறார் நடிகை அஞ்சலி.
View this post on Instagram
வரக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் வாரி போட்டுக் கொண்டு தன்னுடைய வங்கி இருப்பை உயர்த்தும் முனைப்பில் வேக வேகமாக முன்னேறி வருகிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கு படமொன்றில் படுகவர்ச்சியான ஆட்டம் போட்டிருந்த இவர் தனது தோழியுடன் ஐஸ்க்ரீம் சாப்பிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. அந்த ஐஸ்கிரீம் உருகி ஒழுகுவதை பார்த்த ரசிகர்கள் செல்லத்தோட சூட்டில் உருகி ஊத்துது என்று வர்ணித்து வருகின்றனர்