அருண் விஜய் மீது மரியாதை இருந்தது.. ஆனால்.. இப்போது – போட்டு உடைத்த அம்மு அபிராமி..!

அம்மு அபிராமி : இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் யானை. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் ராட்சஷன் அம்மு அபிராமியும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை அம்மு அபிராமி பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த யானை படத்தில் நானும் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகப்பெரிய விஷயமாக தெரிகின்றது.

படத்தில் தவிர்க்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஹரி சார் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்றதும் எனக்கு ஒரு விதமான பயம் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஹரி சாரின் தன்மையை பார்த்தபிறகு அந்த பயம் எனக்கு போய்விட்டது.

அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்றவர்களை நடத்தும் விதம் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக பெண்களை மிகவும் தன்மையாக நடத்தக் கூட ஒரு நபர். முதல் காட்சியிலேயே அவருடைய இயக்கத்தில் நடிப்பதை நான் வசதியாகவே உணர்ந்தேன். ஹரி சாருக்கு என்ன வேண்டுமோ அதனை தெளிவாக நடிகர்களிடம் சொல்லிவிடுவார் அதனை கேட்டாலே போதும் கண்ணை மூடிக்கொண்டு கூட நடித்து விடலாம்.

அந்த அளவிற்கு ஒரு காட்சி பற்றிய அவருடைய விளக்கம் இருக்கும். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் உடன் நான் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவரை யானை படத்தில் ரவி அப்பா என்று தான் அழைப்பேன்.

நான் நடித்த ராட்சசன் திரைப்படம் வெளியான பொழுது எனக்கு நல்லா நடிச்சு இருக்க வாழ்த்துக்கள் என்று மெசேஜ் அனுப்பிய ஒரே ஒரு செலிபிரிட்டி இவர்தான். அப்போதிலிருந்தே அவர் மீது எனக்கு பெரிய மரியாதை இருந்தது. ஆனால், தற்போது அந்த மரியாதை பன்மடங்கு அதிகரித்து விட்டது என கூறியுள்ளார் அம்மு அபிராமி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …