பசங்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை செந்தில் குமாரி இந்த படத்தில் இவருடைய நேர்த்தியான நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.
பள்ளி செல்லும் வயதில் உள்ள ஒரு சிறுவனுக்கு அம்மாவாக நடித்திருந்த இவர் பிரபலங்களின் பலரது பாராட்டையும் பெற்றார். அதன்பிறகு ஒஸ்தி, மெர்சல்,கோலிசோடா படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் பார்த்ததும் அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இருந்தாலும் இவருக்கு தொடர்ந்து சொல்லிக்கொள்ளும்படி சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது சீரியலில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
கனா காணும் காலங்கள் என்ற தொடரில் டீச்சராக நடித்து இருந்தார். அதன் பிறகு பெரிய அளவில் கவனிக்கப்படாமல் இருந்த இவர் தற்போது சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் தெய்வானை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் பாரதி கண்ணம்மா என்ற சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியல்களில் புடவை சகிதமாக குடும்ப பாங்கினியாகவே தோன்றும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
நவநாகரீக உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இவரை பார்த்த ரசிகர்கள் காட்டுக்கோழி.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் செந்தில்குமாரியா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.