நடிகை ராதிகா ஆப்தே இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவுக்கு வந்த புதிதில் பல அழுத்தங்களை சந்தித்ததாக கூறும் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் தன்னுடைய உடல் பாகங்களை பெரிதாக சொன்னவர்கள் குறித்து தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த வகையில் சினிமாவிற்கு அறிமுகமான புதிதில் என்னுடைய உடல் பாடங்களை சர்ஜரி செய்து கொண்டு அழகாக, பெரிதாக மாற்றும்படி என்னிடம் கேட்டார்கள் என்று கூறியுள்ளார்.
தமிழில் கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராதிகா ஆப்தே ஆரம்ப காலத்தில் சினிமாவில் நுழையும்போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இன்று மருத்துவ உலகம் வளர்ந்து விட்டது நம்முடைய முகத்தை நம்முடைய உடலை எப்படி வேண்டுமானாலும் நமக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம் என்ற நிலை இருக்கின்றது.
அதற்காக நமக்கு இயற்கையாக இருக்கும் உடலை செயற்கையாக மாற்றி அழகாக மாற்ற வேண்டுமென்றால் அந்த அழகே தேவையில்லை என்கிறார் ராதிகா ஆப்தே.
அந்த வகையில், நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் என்னுடைய மூக்கை சர்ஜரி செய்து அழகாக சொன்னார்கள். அதன்பிறகு தாடையில் சர்ஜரி செய்து அதனை அழகாக சொன்னார்கள்.
ஒரு கட்டத்தில் என்னுடைய மார்பகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பெரிதாக மாற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார்கள். கால்களில் சர்ஜரி செய்ய சொன்னார்கள்.. மூடியில் வண்ணம் தீட்ட சொன்னார்கள்.. பிறகு பின்னழகை பெரிதாக்க சொன்னார்கள்.. இப்படி அடுத்தடுத்து எனக்கு பல அறிவுரைகள் வந்து கொண்டிருந்தன.
இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால்.. இப்படி அறிவுரைகள் கூறியது வேறு யாருமல்ல.. என்னுடைய நண்பர்களே தான். இவர்கள் கூறுவதை கேட்ட பிறகு இதுவே எனக்கு ஒரு அழுத்தமான மாறியது. இவர்கள் இப்படி சொல்லும் போது ஏன் இப்போது இருப்பது அழகாக இல்லையா..? என்று எனக்கு அழுத்தம் மன அழுத்தம் தோன்றியது. இதனால், எனக்கு கோபம் தான் வந்தது. அதனால் நான் ஏன் மற்றவர்கள் சொல்வதை செய்ய வேண்டும் எனக்கு இது அப்படி செய்வது பிடிக்கவில்லை என்று கூறத் தொடங்கினேன்.
அதன்பிறகு, என்னுடைய உடலை நானே நேசிக்க ஆரம்பித்து விட்டேன் என்று கூறியுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே.