நடிகை பிரியங்கா மோகன் தற்பொழுது நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாக உள்ள அவரது 30-வது படத்தில் அவரது ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
நடிகர் ஜெயம்ரவி கடந்த இரண்டு ஆண்டுகளாக பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மட்டும் இல்லாமல் பாகம் 2 படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிகிறது.
பாகம்-1 வெளியான பிறகு அடுத்த ஒரு ஆண்டில் பாகம் 2 வெளியாகும் என கூறப்படுகிறது. இது தவிர இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜன கன மன என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.
இந்நிலையில், தன்னுடைய ஐம்பதாவது படத்தை பாஸ் என்கிற பாஸ்கரன் ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் இயக்குகிறார்.
இந்த படத்தின் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் வில்லனாக நட்டி நட்ராஜ் நடிக்க உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படம் சிவா மனசுல சக்தி போன்ற ஒரு ஜனரஞ்சகமான ரசிகர்கள் விரும்பி பார்க்க கூடிய அளவுக்கு ஒரு மசாலாப் படமாக உருவாகும் என தெரிகின்றது.
ஜெயம் ரவி நீண்ட காலமாக இப்படியான கதைகளில் நடிக்காமல் இருக்கின்றார். நிச்சயமாக இவரது இந்த படம் வெற்றியை கொடுக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.
இந்நிலையில், சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்துள்ள பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள்,