நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற ஒரு திருவிழா நிகழ்ச்சி கலந்து கொண்டார். இதற்காக, பிரமாண்டமான மேடை செய்து வைத்திருந்த விழா குழுவினர் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் நடிகை ஆண்ட்ரியாவை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு இருந்தனர். ஒருகட்டத்தில் ஆண்ட்ரியாவை அருகில் பார்க்க வேண்டும் என்று அந்த மேடையை நெருங்கி நெருங்கி மேடையின் மீதும் ஏற முயன்றனர் ரசிகர்கள்.
இதனால் அங்கிருந்த போலீசார் தடியடி நடத்தி அந்த ரசிகர்களை துரத்தியடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மட்டுமல்லாமல் நடிகை ஆண்ட்ரியாவை நடனமாட சொல்லி ரசிகர்கள் பலரும் கூச்சலிட்டனர்.
இதுகுறித்து விழாவை ஏற்பாடு செய்து இந்த விழா குழுவினர் அவரிடம் கூற நடிகை ஆண்ட்ரியாவும் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய குரலில் கோவா படத்தில் இடம் பெற்ற இதுவரை இல்லாத உணர்விது என்ற பாடலுக்கு இந்த பாடலை பாடி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார்.
ஆனால் ரசிகர்கள் கடைசி வரை நடனமாட சொல்லி எவ்வளவு கேட்டும் நடனம் ஆடாமல் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார் நடிகை ஆண்ட்ரியா. இதற்கு முன்பு விழா குழுவினருடன் நடிகை ஆண்ட்ரியா வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து பாடல் பாட சொன்னதே பெரிய விஷயம்.. இதில் ஆட்டம் போட சொன்னால் எப்படி..? வாங்குன காசுக்கு தான் கூவ முடியும் என்று கருத்து பதிவு செய்து வருகின்றனர்.