நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், கடந்த 1992ஆம் ஆண்டு நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான ரிக்ஷா மாமா என்ற திரைப்படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர்.
நாட்டாமை நடிகர் என்று செல்லமாக அழைக்கப்படும் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் தான் இவர். ரிக்ஷா மாமா படத்தை தொடர்ந்து 5 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வர் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். தமிழில் பிரியமான தோழி என்ற திரைப்படத்தில் நடிகர் மாதவனின் தோழியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய முகத்தை ஆழமாக பதிய வைத்தார் அம்மணி.
அதனை தொடர்ந்து தித்திக்குதே, தேவதையைக் கண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அதன்பிறகு தமிழ் படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி விட்டார். கடந்த 2014ஆம் ஆண்டு லட்சுமணா என்ற கன்னட சினிமாவில் முக்கியமான படத்தில் நடித்திருந்தார்.
கடந்த 2001ஆம் ஆண்டு காமெடி ஸ்டார் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்றி இருந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீதேவி விஜயகுமார் தற்பொழுது ரூபிகா என்ற ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளார்.
இந்த குழந்தைக்கு தற்போது ஏழு வயது ஆகின்றது. தன்னுடைய குழந்தையின் ஒவ்வொரு பிறந்த நாளையும் ஒவ்வொரு நாட்டில் கொண்டாட வேண்டும் என்ற கொள்கையுடன் இருக்கும் இவர் தன்னுடைய குழந்தையின் பிறந்தநாள் வரும்போதெல்லாம் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவது வழக்கம்.
இந்நிலையில் தன்னுடைய தொடைகள் பளிச்சென தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அம்மணியின் பளிங்கு போன்ற பளபளவென இருக்கும் தொடையை பார்த்த ரசிகர்கள் ரம்பாவை ஓவர்டேக் பண்ணி விடுங்க போல இருக்கு என்று வர்ணித்து வருகின்றனர்.