சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் VJ மகேஸ்வரி நடிகர் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு தன்னுடைய விவாகரத்திற்கு என்ன காரணம் என்று முதன்முறையாக மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய மகனை நான் வளர்க்க வேண்டும் நான் தான் வளர்க்க வேண்டும் என்று பல சட்ட போராட்டங்களை மேற்கொண்டு தற்போது அதன் வெற்றி பெற்றுள்ளேன்.
திருமணம் ஆன பின்பு தன்னுடைய கணவன் மற்றும் மாமியார் ஆகிய இருவரும் என்னை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சினிமாவில் நடிக்கக்கூடாது இப்போது செய்து கொண்டிருக்கும் தொகுப்பாளினி வேலையை வேண்டுமானாலும் நீ தொடர்ந்து செய்துகொள்ளலாம் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து விட வேண்டும் என்று எனக்கு கட்டுப்பாடு விதித்தார்கள்.
மேலும் என்னை தனி ஆளாக வளர்த்து ஆளாக்கிய என்னுடைய அம்மாவிற்கு ஒரு ரூபாய் கூட நான் தரக்கூடாது என்றும் நான் சம்பாதிக்கும் அனைத்தையும் எங்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என்றும் கராராக கூறினார்கள். இதனால் எங்கள் குடும்பத்தில் நிம்மதி என்பதே இல்லாமல் போனது. இப்படி எனக்கு பல முறை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்குதல்கள் நடந்தது.
எனவே இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர சிறந்த வாய்ப்பாக இருப்பது விவாகரத்து தான் என்ற முடிவுக்கு வந்தேன். தற்போது நிம்மதியான வாழ்க்கையை நான் வாழ்ந்து வருகின்றேன். என்னுடைய மகன் என்னுடன் பாதுகாப்பில் இருக்கிறார். நான் கவர்ச்சியாக உடையணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதால் பலரும் என்னை விமர்சனம் செய்கிறார்கள்.
நான் என்ன உடை அணிய வேண்டும் என்று நான் விரும்பிய உடைதான் அணிய முடியும் அதற்கான முழு சுதந்திரம் எனக்கு இருப்பதாக நம்புகிறேன் என்று கூறுகிறார் மகேஸ்வரி.