கேரளாவை சேர்ந்த நடிகை சம்யுக்தா மேனன் பாப்கார்ன் என்ற மலையாளத் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ள இவர் ஜூலை காற்றில் களரி என்ற இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
நடித்த பகுதி என்ற திரைப்படத்தில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கி கொண்டார் சம்யுக்தா மேனன். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லாக்டோன் நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.
எனக்கு நேரம் கிடைக்கும் போது மட்டுமே சமூக வலைதளங்களில் தோன்றினேன். மற்றபடி என்னுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் பேசி மகிழ்ந்து மகிழ்ச்சியாக இருந்தேன்.
இந்த நேரம் எனக்கு மிகச்சிறப்பான நேரம் என்று கூறுவேன் வேலை நாட்களில் நிச்சயமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேசி மகிழ்வதற்கு நேரம் இருக்காது. அதற்காக தங்களுடைய வேலையை ஒத்தி வைத்துவிட்டு தான் இதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டி இருக்கும்.
ஆனால் லாக் டவுன் நேரத்தில் வேலையே இல்லை என்ற நிலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்துரையாட நிறைய நேரம் இருந்தது என்னுடைய வாழ்வில் இது சிறந்த நேரம் ஆகும்.
இந்த நேரத்தை நான் எப்போதுமே மறக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தன்னுடைய செல்பி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இது லிப்ஸ் அல்ல.. பிங்க் கலர் பப்ஸ் என்று வர்ணித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்