நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இடையே இருக்கும் காதலை பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. இந்திய அளவில் பிரபலமான ஒரு திரையுலக ஜோடி என்றால் அது நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் என்று கூறலாம்.
இவர்கள் பற்றிய தகவல் எதுவாக இருந்தாலும் அவை இணையத்தில் வைரலாவது வாடிக்கையாக நடந்து வருகின்றது. கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்தனர்.
கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்பொழுது பார்சிலோனா அவருக்கு தங்களுடைய விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர்.
திருமணம் முடிந்த கையோடு திருப்பதி மற்றும் கேரளாவில் உள்ள சில கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அவனை தொடர்ந்து தாய்லாந்து இருக்கு தேனிலவு கொண்டாட சென்றனர்.
பிறகு இந்தியா திரும்பிய இருவரும் தங்களுடைய வேலைகளில் பிசியாக இருந்தனர். தற்போது மீண்டும் தங்களுடைய தேனிலவை கொண்டாட பார்சிலோனா விற்கு பறந்துள்ளனர்.
தனி விமானத்தில் சென்று உள்ள இருவரும் விமானத்தில் செல்லும் பொழுது பயங்கரமாக ரொமான்ஸ் செய்துகொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை தங்களுடைய இணையப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது